கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கடவுள்(விஷ்ணு) மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
காதலித்து(ராதை) வேதனையில்(பூ பாரம்) மூழ்கவேண்டும் -கவி கண்ணதாஸன் வரிகளால் உந்தப் பட்டு….!
ராதையா! பார்த்தியா! காதலா! கீதையா!
பாதைபா ரதத்தினை பூட்டிய -தாதையவர்,
விற்களம், ராஸலீலை, விஷ்ணுகண்ணன் வேதனை:
தற்கொலைக்கு ராதை தயார்….கிரேசி மோகன்…!
அடிவானம் ராதை அலைகடல் கண்ணன்
பிடிவாதம் இல்லா பிணைப்பு -முடிவாக
ஜீவன் அலைந்து ஜகன்நாத னோடிணையும்
பாவம் பரிகாரம் போகும்….!