மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் … அவுஸ்திரேலியா
மனம் உருகும் அடியார்கள்
தினமும் உனைக் காண
மரகத மயிலேறும் பெருமானே
அரு உருவமாய் இருந்து
திரு உருவமாய் வந்த
அழகு வடிவேலப் பெருமானே
கருவிலே வளரும் பிள்ளை
உனது நினைவிலே வளர கருணையே தருவாய் கந்தபெருமானே
தெரு எலாம் திரியும்
சிறு மதி படைத்தோரை
திருத்திடு கந்தப் பெருமானே !

Leave a Reply