நிம்மதியே நின்பாதம் தாயே!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடகல என்றும் துணைநீயே தாயே
உள்ளமதில் என்றும் உறுதிநிறை தாயே
உன்கமல பாதம் சரணடைந்தேன் தாயே!

வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்
வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
தாயே உன்பாதம் பற்றுகிறேன் நாளும்!

வாதமது செய்யும் மனமகல வேண்டும்
போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
காதலுடன் உன்னைப் பாடிவிட வேண்டும்
கடைக்கண்ணால் என்னைப் பார்த்துவிடு தாயே!

ஆவேசம் கொள்ளுவதை அழித்துவிடு தாயே
ஆசையுடன் அலைவதைநீ அகற்றிவிடு தாயே
நீசரது சகவாசம் நீக்கிவிடு தாயே
நிம்மதியே எந்தனக்கு நின்பாதம் தாயே!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *