வாய் திறந்தபடி எல்லாவற்றையும் முழுங்கிக்கொண்டு இருக்கிறது .
ஆளுயுர அலைகள் இதில் ஊழி ஆடி இசை பாடும்
பெருமரங்கள் ஊஞ்சலாடி, தானாகத் தரை படுக்கும்
காமக்காற்று முனை தேடிக் கொக்கரித்து ஆர்ப்பரிக்கும்
பாரம் தாங்கா விண்வெளி நிலம் முற்றும் ஈரம் செய்யும்
அழுத்தம் கொண்ட பூமி கொஞ்சம் தனியாய்த் தான் விலகும்
எழுச்சி மிக்க மலைகள் கொஞ்சம் நின்றபடி புகையும் ஊதும்
வெளிறிப்போன விலங்கினங்கள் இரை மறந்து ஒன்று கூடும்
வெளிச்சப்புகை மீண்டும் வர உலகம் திரும்ப உய்த்து நிற்கும்
காலம் மட்டும் கண்ணயராது காத்திருந்து காவல் செய்யும்
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .