வேதா. இலங்காதிலகம் (பா வானதி)
டென்மார்க்.

என்னுள் குமிழியிடும் திமிர்  எழுத்து.
தென்றலும் வெட்கத்தோடு தாண்டி நடந்தது.
நெஞ்சத் தண்டவாளத்தில் எழுத்து ரயில்
நெடுந்துயிலின்றுp கவனமாக ஓடுகிறது
மூங்கிலில் மறைந்த புல்லாங்குழலாக
மேகத்துள் முடிந்த மழையாகத்
தாகமாக ஓடுகிறது என்னுள்ளே எழுத்து
மோகமாக இதைக் கவிதை ஆக்குகிறேன்.

தமிழில் முழமையான பழைய இலக்கண
நூல் தொல்காப்பியமே! முழவதும் படித்திட
நிழலும் எனக்குத் தடை இடாது
விழவிடாத கருவியே எழுத்தும் எழுத்தாணியும்.
எழுத்து, சொல், பொருளாம் மூவிலக்கண
முழு இலக்கணமும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
எழத்து இலக்கணம் இரு வகையான
முதல் எழத்து சார்பு எழுத்தாம்.

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லாம்
நல்ல பாரதியாரின் ஒரு கூற்று.
எ – உச்சரிப்பைக் காதால் கேட்கிறோம்
எ   யை கண்ணால் விழிக்க எழுதுகிறோம்.
உயிரெழுத்து மெய்யெழுத்து  உயிர்மெய் எழுத்தாகி
வல்லினம், மெல்லினம் இடையினமும் ஆகும்
முதல், கடை, ஈற்று கூட்டெழுத்தாகும்
சொல்வளம் எழுதினால் பெரும் கட்டுரையாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *