எழுத்து – 14

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்

எழுத்துகளின் சேர்க்கையில் எண்ணிக்கை அற்ற
விழுப்பம் வைத்தாய் எங்கள் இறைவா!
ழுத்து அறிவற்றவனுக்கது சிதம்பர சக்கரம்
எழுத்தை  அறிந்தவனுக்கது இவ்வுலக சுவர்க்கம்.
பார்வை அற்றவனுக்கும் மொழி உண்டு.
எண்ணத்தின் உயிர்ப்பு எழுத்து, கையெழுத்து
எழுத்தின் இதம் ஆர்ப்பரிப்பை அடக்கும்
அழுத்தி அலையும் மனத்தை அமைதியாக்கும்.

எழுத்து யாகம், பூசனை ஓமகுண்டம்
அம்மா என்பது மூன்று எழுத்து
அடி என்பது இரண்டு எழுத்து
வா என்பது ஓர் எழுத்து
எழுத்து ஒரு பிரமிப்பு! சுவாசம்
எழுத்து வேளாண்மை ஓர் ஆயதமுமாகும்
திறமையெனும் ஞானச்சாவி கொண்டு எழுதலாம்.
பன்முகக் கூறுடைய எழுத்தே திருவள்ளுவம்.

அன்றாட நெறி ஆன்மீக அறம் நிறைத்து
ஈரடியில் உலகத் தத்துவம் கூறுவது.
தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை மொழி
என்பதால் எழுத்து கருவி ஆகிறது
எல்லா மலர்களும்  கண் வைப்போரை
கொல்லும் அழகால் வளைப்பது போல
வல்லமை எழுத்தும் ரசனைத் தேனாம்
வெல்லும் அறிவைப் பரிமாறுவது உண்மை.

Share

Comments

2 responses to “எழுத்து – 14”

  1. அன்புடன் ஆசிரியர் அண்ணா கண்ணன்
    வணக்கம்
    எழுத்து தொடர்– எனது கவிதைகள் பார்த்தேன்
    1-14 கவிதைகள் போட்டிருந்தேன் வல்லமையில்
    எழுத்து 3-4-6-9-12 இலக்கக் கவிதைகளைக் காணோம்///வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்

  2. உங்கள் பெயரிட்டுத் தேடினால், எல்லாம் கிடைக்கிறதே.

    பாருங்கள் – https://www.vallamai.com/?s=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *