எழுத்துகளின் சேர்க்கையில் எண்ணிக்கை அற்ற
விழுப்பம் வைத்தாய் எங்கள் இறைவா!
எழுத்து அறிவற்றவனுக்கது சிதம்பர சக்கரம்
எழுத்தை அறிந்தவனுக்கது இவ்வுலக சுவர்க்கம்.
பார்வை அற்றவனுக்கும் மொழி உண்டு.
எண்ணத்தின் உயிர்ப்பு எழுத்து, கையெழுத்து
எழுத்தின் இதம் ஆர்ப்பரிப்பை அடக்கும்
அழுத்தி அலையும் மனத்தை அமைதியாக்கும்.
எழுத்து யாகம், பூசனை ஓமகுண்டம்
அம்மா என்பது மூன்று எழுத்து
அடி என்பது இரண்டு எழுத்து
வா என்பது ஓர் எழுத்து
எழுத்து ஒரு பிரமிப்பு! சுவாசம்
எழுத்து வேளாண்மை ஓர் ஆயதமுமாகும்
திறமையெனும் ஞானச்சாவி கொண்டு எழுதலாம்.
பன்முகக் கூறுடைய எழுத்தே திருவள்ளுவம்.
அன்றாடநெறி ஆன்மீக அறம் நிறைத்து
ஈரடியில் உலகத் தத்துவம் கூறுவது.
தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை மொழி
என்பதால் எழுத்து கருவி ஆகிறது
எல்லா மலர்களும் கண் வைப்போரை
கொல்லும் அழகால் வளைப்பது போல
வல்லமை எழுத்தும் ரசனைத் தேனாம்
வெல்லும் அறிவைப் பரிமாறுவது உண்மை.
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.
அன்புடன் ஆசிரியர் அண்ணா கண்ணன்
வணக்கம்
எழுத்து தொடர்– எனது கவிதைகள் பார்த்தேன்
1-14 கவிதைகள் போட்டிருந்தேன் வல்லமையில்
எழுத்து 3-4-6-9-12 இலக்கக் கவிதைகளைக் காணோம்///வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்
அன்புடன் ஆசிரியர் அண்ணா கண்ணன்
வணக்கம்
எழுத்து தொடர்– எனது கவிதைகள் பார்த்தேன்
1-14 கவிதைகள் போட்டிருந்தேன் வல்லமையில்
எழுத்து 3-4-6-9-12 இலக்கக் கவிதைகளைக் காணோம்///வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்
உங்கள் பெயரிட்டுத் தேடினால், எல்லாம் கிடைக்கிறதே.
பாருங்கள் – https://www.vallamai.com/?s=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D