ஏறன் சிவாவின் துளிப்பாக்கள்

ஏறன் சிவா
புகார் தெரிவித்ததும்
உடனே நடவடிக்கை எடுத்தனர்!
புகார் கொடுத்தவர் மீது!
****
இடைவிடாமல் தொடர்கிறது
உண்ணாவிரதப் போராட்டம்
ஏழையின் வீடுகளில்!
****
சாலையைப் புதுப்பிக்கக்
கொஞ்சம் நிதி ஒதுக்கப்பட்டது
அரசியல்வாதிக்கு!
****