நிலை மாறாக் காதல் !
–பி.தமிழ் முகில்.
தகதகவென ஜொலிக்கும்
தங்கக் கிரீடம் சுமந்து
சூரியப் பெண்ணவள்
வான் சோலையில் உலவ
எதிர்பட்ட மேகக் காதலனை
கண்டதும் மெல்ல
நாணமதுவும் ஆட்கொண்டு விட
தன் சூரியக் காதலியை
மேகக் காதலன்
ஆரத் தழுவிக் கொள்ள – அவளோ
வெட்கத்துடன் சிறு கீற்றாய்
புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு
மெல்ல தன் முகம் மூடிக் கொள்ள
ஆங்கே அரங்கேறுகிறது
அந்திப் பொழுதிலோர்
நிலை மாறாக் காதல் !
நிலவைத்தான் இதுவரை பெண்ணாக பாவித்து கவிதைகள் வந்துள்ளன. எனக்கு தெரிந்து இந்தக் கவிதையில் தான் முதன்முதலாக சூரியனை பெண்ணாக பாவித்து கவிஞர் எழுதியுள்ளார்.
முரன்பாடுகளை உண்டாக்குவதுதான் மாற்றம். அந்த வகையில் இது வித்தியாசமான கவிதை.பாராட்டுக்கள்.
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே !