திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில்
அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் தருகின்றது. திருப்பாவையின் 7ஆவது பாடல் கீசுகீசு என்றெங்கும், இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.
திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | சேகர் முத்துராமன் குரலில்
நாயகப் பெண்பிள்ளாய்! எனத் தோழியரை ஆண்டாள் அழைத்தாலும் அந்த விளி, அவருக்கே அழகாகப் பொருந்துகிறது. இந்தப் பாடலில் தேசமுடையாய் என ஆண்டாள் சொல்வது, இந்தக் காலப் பொருளில் இல்லை. தேசு என்ற சொல்லுக்கு ஒளி, அழகு எனப் பொருள்கள் உண்டு. ஒளி பொருந்திய பெண்ணே என்ற பொருளிலேயே தேசமுடையாய் என அழைக்கிறார். கீசுகீசு என்றெங்கும் என்ற 7ஆவது பாடலை இப்போது சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)