கிருஷ்ண கமலத்திற்குப் பாண்டவ கௌரவர் பூ என இன்னொரு பெயர் உண்டு. இந்தப் பூ, மகாபாரதத்தையே தன்னுள் கொண்டுள்ளதாகச் சித்திரிக்கப்படுகிறது. சுற்றிலும் இழை இழையாக உள்ளவை கௌரவர்கள். நடுவில் உள்ள ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்கள். மையத்தில் உருண்டையாக உள்ளது திரௌபதி. அதற்கும் மேலே உள்ள மூன்று இழைகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள். உட்புறம் தெரியும் கருநீல (பர்ப்பிள்) வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் என வர்ணிக்கிறார்கள். இந்தப் பூவை வீட்டில் வளர்த்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கை. இதைப் பார்த்து மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *