கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம்

0
Kanini experts discussion

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், துறைதோறும் வல்லுனர் குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், தெரிவிக்கும் கலைச்சொற்களை, சொற்குவை இணையத்தளத்தில் ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில், 19.08.2021 அன்று கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன், நீச்சல்காரன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, இரா.நரசிம்மன் (சைபர்சிம்மன்), முனைவர் இல.சுந்தரம், முனைவர் வ.தனலட்சுமி, மீ.சோமசுந்தரம், முனைவர் ச.முத்துவிக்னேஷ், மு.சு.அருண்குமார். இர.கன்னியம்மாள், அ.கிருஷ்ணகுமார், ச.பார்த்தசாரதி, கி.முத்துராமலிங்கம், க.விஜயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க.காமராசு, நோக்கவுரை நிகழ்த்துகிறார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

சொற்குவை (sorkuvai) யூடியூப் தளத்தில் இது நேரலையாக ஒளிபரப்பாகிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.