சென்னை, கோவூரில் வசிக்கும் ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள். கொலுவை நமக்கு அறிமுகப்படுத்தி, ‘சகலம் சௌபாக்கியம் சுபம்’ என இவர் நிறைவுசெய்வது மங்களகரம். செல்வியர் காயத்ரியும் ஹரிணியும் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என மழலைக் குரலில் பாடுவது தனி அழகு.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.