ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி, பக்தி இலக்கியத்தில் ஒரு மாணிக்கம். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைப் பெட்டகம். சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் செவ்வியல் சித்திரம். சௌந்தர்ய லஹரி என்பதற்கு அழகின் அலைகள் எனப் பொருள். அன்னையின் அழகை விதந்தோதும் இந்த அலைகளின் ஒவ்வொரு துளியும் அமுதம். இந்த மதுரகவியைத் தமிழில் விளக்குகிறார், கவிஞர் மதுமிதா. பருக வாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.