unnamed

சி. ஜெயபாரதன், கனடா 

பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில்
வில்லாதி வீரன் ராமனை,,
உத்தம ராமனாய்,
உன்னத ராமனாய் உயர்த்திய
கம்பன் கை தளர்ந்து,
எழுத்தாணி ,
ஓலையில்
எழுத மறுத்து அழுதது !
உச்சத் துயர் நிகழ்ச்சி
சீதைக்கு
இரண்டாம் வனவாசம் !
எதிர்பாரா
இறுதிப் பயணம் !
கம்பன் எழுதாமல்
கை விட்ட ராம கதை
உத்திர காண்டம்,
சீதாஞ்சலி !
சிங்காதனம் ஏறிய ராமன்
ஜெகம் புகழும்
கம்ப ராமன்,
சீதா ராமன் அல்லன் !
தீக்குளித்த தூயவளை
நம்பாதவன்,
மாற்றான்
மடியில் வைக்கப் பட்டு
வேற்றான்
மனையில் சிறைப் பட்டவள்.
கறை பட்ட சீதா
பொது மக்கள் புகார்  !
பாஞ்சாலி சபதத் துக்கு
கண்ணனால்
கீதை சொல்லப் பட்டது.
ஆனால், அபலை
சீதாவுக்கு,
கர்ப்பிணி மாதுக்கு,
தீர்ப்பில்லா
ஆயுள் தண்டனை !
இரண்டாம் வனவாசம் !
சீதாஞ்சலி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.