அனுமன் சாலீஸா – பரிடாலா சுவாமி இராமதாசர் பஜனை

இவர் குரலை இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்கள் அவசியம் வந்து கேளுங்கள் என அழைத்தார் நண்பர். அதிகாலை ஐந்து மணிக்குச் சென்று பரிடாலா சுவாமி இராமதாசர் குரலைப் பதிவு செய்தபோது, நானும் அப்படியே உணர்ந்தேன். ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ள பரிடாலா என்ற ஊரில், ஆசியாவின் மிக உயரமான (135 அடி) திவ்ய சுந்தர அபய வீர ஹனுமான் சிலையை நிறுவியவர் இவர் என்பது பிறகுதான் தெரிந்தது. பக்தியில் தோய்ந்து, லயித்து, தென்றலைப் போல வருடிச் செல்லும் இவரது குரலைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *