திருப்பூவணப் புராணம் – பகுதி – (20)
கி.காளைராசன்
பதினாறாவது
சுச்சோதிபிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்
1232 பொங்கர்தொறுமங்குறவழ்பொழிறிகழும்பூவணத்திற்பொருந்திமன்னன்
றங்குகருமங்கண்முதற்றானிழைத்ததியாவையுநீ சாற்றுகென்னா
வெங்கொடுங்காமாதிகளை யொறுத்தொழித்தசவுனகன்றான்வினவலோடுந்
துங்கமறைவடித்தெடுத்ததூயவியாதனைநினைந்துசூதன்சொல்வான்
1233 கூடியநான்மறைவாணர்குலுத்துதித்தகுருபரநீகுலவுகின்ற
கேடிலருங்கதை மேலாக்கிளத்திடுநன்புராணமிகுங்கேள்வியோய்நீ
வாடியடைகுநர்தமக்குமகிழ்ந்தளிக்கும்வள்ளலுநீயதனானிற்கு
நாடிலிணையின்றென்றுநரபதிசெய்கையைச்சுருக்கிநவில்வதானான்
1234 சதுர்மறையோர்குரவருடன்றமிழ்மதுரைதணந்தேழ்பைம்புரவிபூட்டி
யுதயமால்வரைமுகட்டினோராழித்தேர்வெய்யோனுதிக்கும்வேலை
யிதயமதினொருமையுடனியல்வீணைநாரதன்றானியம்புமாற்றா
லதிர்கழற்காலரசர்பிரானரும்பாரிசாதவனத்தடைந்துமாதோ
1235 வண்டினந்துதையுமண்டலப்பொகுட்டுமலர்தருமணியொளிபரப்புங்
குண்டநீர்படிந்துகோதில்செம்பவளக்கோலமேனிச்சிவக்கொழுந்தைக்
கண்டடிபணிந்துகருதரும்பிதிர்கள் கடன்கழித்தடைந்தவனோர்நாட்
பண்டருவேதபராயணரோடும்பரிந்துநற்றொழின்முறைபுரிந்து
1236 வந்திடுமளவின்வானவர்பெருமான்மாபெருங்கோபுரவாயின்
முந்தைநான்மறையுமுழுதொருங்குணர்ந்துமூவுலகேத்திடுநெறிசேர்
சுந்தரநீறுதுதைந்தமெய்யழகுந்தூயவற்கலையுடையழகுந்
தந்தகாலவனைக்கண்டவன்றாளிற்றடமணிமுடிபடத்தாழ்ந்தான்
1237 தாழ்ந்தெழுமன்னன்றன்னைநேர்நோக்கித்தவமுனியாசிகள்கூறி
வாழ்ந்தனைகொல்லோமன்னநீயென்னாவளம்பெறமாற்றநன்கறையப்
போழ்ந்திடுமதியம்பொதிந்தபொற்சடிலப்பூவணமேவுமாரமுதைச்
சூழ்ந்தமாதவர்கள்குழாங்கண்முன்றுதைந்துதித்திடத்தொழுதுகைகுவித்தான்
1238 தொழுதகைதலைமேற்சுமப்பமெய்பொடிப்பத்துதித்திடுகின்றசொற்றருநாத்
தழுதழுத்திடச்செந்தபனியப்பொகுட்டுத்தாமரைக்கண்கணீரருவி
பொழிதரவுள்ளமுருகிடவன்பிற்பொருந்தியானந்தவாரிதியின்
முழுகிமெய்ஞ்ஞானவிழியினாற்கண்டுமூண்டெழுகாதலின்மீண்டே
1239 பாலின்வெண்டரளந்தனைத்திரைசுருட்டிப்பந்தெறிந்தேவிளையாடுஞ்
சீலமார்வைகைத்திகழ்புனலிடத்துஞ்சேர்ந்ததெள்ளமுததீர்த்ததுஞ்
சாலநீள்வான்றோய்சந்திரதடத்துஞ்சங்கரன்கோயிலினன்பாற்
கோலவாளியிரண்டிட்டதோரெல்லைகொண்டமார்க்கண்டதீர்த்தத்தும்
1240 நானமுந்தருமதானமும்புரிந்துநவிலுநல்லைந்தினங்காறு
மானபண்பாடியறுபதமுரன்றே யணிமுகைவிண்டிடவலர்த்தித்
தேனிருந்துண்டுதேக்கிடுமிதழிச்சிகழிகைதிகழ்ந்துசெஞ்சடில
வானவன்பூசைமறைமுறைநடாத்திவைகினன்வையகங்காப்போன்
1241 முறைமையினங்ஙனுறையுநாடோறுமொழியுமூவாயிரமுனிவர்க்
கறுசுவையடிசிலளித்துவான்மதியமருங்கலையொடுங்குநாட்டீர்த்தத்
துறைதொறும்படிந்துதூயமாதவர்தந்துணையடிதொழுதுயர்பிதிர்கள்
பெறுதிலோதகமும்பிண்டமுமளிப்பான்பிஞ்ஞகன்பூசையும்பேணி
1242 மாமணிவரன்றிமறிதிரைகொழிக்குமருமலர்க்குருமணிவாவி
நாமவேலரசனண்ணுருவுணர்ந்தேநன்முநிகணத்தவர்நாகர்
தேமலரலங்கற்றிண்மனுவேந்தர்சித்தர்விஞ்சையர்கள்கின்னரர்க
ளேமுறுபிதிர்களெண்டிசாமுகத்தரியாவருமீண்டினரன்றே
1243 நாந்தகத்தடக்கைநரபதியந்தநன்புனன்மூழ்கியேயன்பாற்
சேர்ந்ததக்கிணாபிமுகத்தனாய்முன்னூற்றிகழிடம்பூண்டுநன்குசையி
னேய்ந்தமாமறையோரிசைத்திடுமாற்றாலிருந்துசங்கற்பநேர்புரிந்தாங்
காய்ந்திடுதருப்பைதன்னிலாவாகித்தருங்குலப்பிதிர்களையம்மா
1244 வழுவிலாச்சிறப்பின்மன்னியமரபின்வந்தருள்கின்றவென்றந்தை
கழிபெருங்காதற்காளையானாகிற்கலைக்கடல்கடந்தனனாகின்
மொழிவருந்தவங்கண்முயன்றனனாகின்முனியுரைதவறிலனாகிற்
பொழிதருங்காதற்பொருவிடைப்பாகன்பூசனைபுரிந்தனனாகில்
1245 அரியநற்றீர்த்தத்துறைதொறுமன்பினடைந்தியான்படிந்தனனாகிற்
றருமமுந்தவமுந்தானொருவடிவாந்தந்தைசொற்றவறிலனாகிற்
பிரிவரும்பிதிர்நன்பிதாமகன்பிதாவாம்பெருங்குலப்பிதிர்கள்யாவருமே
யிருநிலம்புகழவெட்டருப்பணங்கொண்டெதிர்முகமாகவேவேண்டும்
வேறு
1246 ஈங்கடைந்தேயாவருமேயெதிர்முகந்தந்தியானளித்தவிரும்பிண்டத்தை
வாங்கியருந்தாதொழியின்வல்லையிலாருயிர்துரப்பன்மன்றவாய்மை
நீங்கலருமனுகுலத்தினிந்திக்கப்பட்டேனாய்நேர்வனென்னா
வாங்கணைந்தோர்செவிநிறைப்பவறைந்துதிலோதகமதனையவர்கட்கீந்தான்
1247 ஈந்திடுமவ்வேலைதனிலிருநிலவேந்தன்பிதிர்களின்புற்றேவான்
றோய்ந்துயர்பொன்னுலகமுறுஞ்சுரர்வடிவங்கொண்டவன்முன்றோன்றியேனோர்
தாந்தெரியாவகையடைந்துதக்ககரபாத்திரத்திற்றந்தயாவு
மாந்தரங்கமுடன்றேவரமுதருந்துமாபோலவருந்தினாரால்
வேறு
1248 அந்தவேலையின்மன்னனரியபிதிர்கடம்மை
முந்துறவேகாண்டலுமேமுதிருங்காதன்மூண்டே
நந்தம்பிதிர்கள்காணநானன்குடையேனென்னாச்
சிந்தைமகிழ்ந்தாங்கன்னோர்செப்புமாசிபெற்றான்
1249 பூணார்மைந்தர்தந்தபுதல்வர்சூழந்துபோற்ற
வீணாள்படுதலன்றிவீடுவிசயத்தோடு
நீணாளுடன்வாழ்கென்னாநேர்ந்ததவமீந்தயன்மால்
காணவரனல்லதிருங்கழற்சேவடியிற்கலந்தார்
1250 இந்தத்தலமான்மியத்தினிறும்பூததனாலிறையோ
னந்தமற்றவறஞ்சேர்ந்தரியபுகழைநாட்டி
யுந்துங்காதற்பிதிர்கட்குயருங்கதிநன்குறவே
தந்தபுரமென்பதனைத்தாவில்விளக்கந்தந்தான்
1251 வாவிதிகழ்பூவணத்துமாணிக்கம்மாமலைக்கு
மேவுசெம்பொன்கொடிக்கும்வேணவாவினீந்து
பூவலையந்தான்போற்றும்போன்னனையானல்லருளாற்
றேவவன்மனருள்சேய்சீவன்முத்தனானான்
1252 ஆனமூவாயிரநல்லரியமுனிவரந்த
மானவேற்கைமன்னன்வண்மைகண்டுமிக்க
தானந்தன்னைநல்கத்தத்தம்பிதிர்கடுய்த்து
மோனஞானவின்பமுத்திதன்னிலுற்றார்
1253 பன்னவரும்பராரைப்பாரிசாதவனத்தின்
வன்னமிகுநன்மணிப்பூண்மன்னன்றன்மைகாணூஉ
வுன்னவரியகாதலுள்ளம்பிடித்தாங்குந்தப்
பொன்னுலகத்தினும்பர்பூமழைமிகவேபொழிந்தார்
1254 பண்ணுபாவமனைத்தும்பாறல்செய்வதாகிப்
புண்ணியமாய்மேலாகிப்பொருந்தும்புட்பகானத்
தண்ணனண்ணுகோயிற்கரியநிருதிதிசையிற்
றண்ணந்துளபமாயோன்றனக்குப்பச்சிமத்தில்
1255 தாவில்புகழ்நற்றந்தைசகலவுலகும்பெறுவான்
றேவதேவனருளாற்றேவவன்மலிங்க
மோவின்மறையோர்தம்மாலொன்றையங்கேதாபித்
தாவதானதானமந்தமறையோர்க்குதவி
1256 கோடிசெம்பொனந்தக்குழகன்றனக்குங்கொடுத்தாங்
காடல்வயமாமன்னனருந்தவஞ்செய்தமர்நாட்
டேடுங்கதிகணல்குந்தீர்த்தந்தோறும்படிந்து
மாடுநல்லவீணைவல்லமுனிவந்துற்றான்
1257 உற்றமுனிவனுரைப்பானுரைசெய்யிந்தப்பதியி
னற்றமறுநன்மகிமையறிந்தனைகொல்லென்னா
மற்றையந்தத்தலத்தின்வைகன்மூன்றுவைகிப்
பொற்பினோங்குங்கயிலைப்பூதரத்திற்போந்தான்
1258 அழிவில்புகழ்மன்னன்பினானதானையோடு
மெழுதாமறைதேர்மூவாயிரமாமுனிவரேத்த
மழையினகடுகிழிக்குமதில்சூழ்மாடநீடும்
பொழில்சேர்ந்தோங்கும்பொற்பிற்போகவதியிற்போந்தான்
வேறு
1259 தாவிலத்தலத்திலெட்டருப்பணஞ்செய்து
தேவவன்மேசனைத்தெரிசனஞ்செய்வோர்
மேவுமெண்டலைவர்வான்முறைவிருப்பியே
யாவருந்தொழச்சிவபுரியினேறுவார்
1260 பரவுபஞ்சாமிர்தம்பஞ்சகவ்விய
மருவியபலோதகமஞ்சனத்தினா
லரியபூவணேசனுக்காட்டுவோர்பலன்
கரியகண்டப்பிரான்கழறல்வேண்டுமால்
1261 ஆடல்செய்பூவணத்தரனுக்கானெய்யாற்
பீடுறவோர்விளக்கேற்றும்பெற்றியோர்
தேடருங்கதியருள்சிவபுரத்தினிற்
கோடிநன்குலத்துடன்கூடிவாழ்வரால்
1262 நந்தனவனமணிமாலைநற்றுகி
லந்தனமாதியீசனுக்களித்துளோ
ருந்துசீர்க்கோடிநல்லுகமொரொன்றினுக்
கெந்தைசேர்கயிலையினினிதுவாழ்வரால்
1263 குழந்தைவெண்மதிச்சடைக்குழகனுக்குமுன்
பழிந்திடுமாலயந்தனையுண்டாக்குநர்க்
கெழுந்தவன்புடன்புதிதியற்றுமன்னதின்
வழங்கிடுமதிகநான்மடங்குபுண்ணியம்
1264 தவலருந்தினவிழாத்தங்குந்திங்களி
னிவறலினெழுச்சிநன்கியற்றுவோரியாண்
டவர்மணித்தேர்விழாவணிநடத்துவோர்
சிவபிரானுடன்சிவபுரியிற்சேர்குவார்
1265 உற்றவித்தலத்திடையுயிர்மெய்யொத்துறக்
கற்றுணர்கலைவலோர்கண்டமாத்திரை
பொற்புடன்பொருந்தினோர்புனிதமேனியாய்
நற்பெருங்கயிலையினண்ணிவாழ்வரே
1266 ஆயினோரணுவளவறையுமித்தலத்
தேயநான்மறையவர்க்கீந்தவப்பொருள்
சேயுயர்விசும்புதோய்சிகரபந்திகண்
மேயசெம்பொறிகழ்மேருவாகுமால்
1267 உறுமொர்நன்பிடியனமுதலவினோரவண்
குறைவினான்மறைதெரிகோடியந்தணர்க்
கறுசுவையடிசிலன்னியதலங்களிற்
பெறவுவந்தருள்பலப்பேறுண்டாகுமால்
வேறு
1268 சதுர்முகக்கடவுளன்னசவுனகமுனிவவிந்தப்
பதிதனிற்றிலோதகஞ்செய்பான்மையோர்பலனையாமோ
துதிதரலரிதுமாதோசொற்றிடின்மன்றவாய்மை
மதிபொதிசடிலத்தெங்கள்வானவனறிவனன்றே
1269 புகலுநல்லின்பமிக்கபுண்ணியமளிப்பதாகி
நிகழ்தலம்புகழ்வதாகிநீள்பவந்துடைப்பதாகி
யகமகிழ்தரவெம்மானுக்கானந்தகானமென்றுந்
திகழ்வுறுநாமம்பெற்றித்திருநகர்சேர்ந்திலங்கும்
1270 தகுந்திருமுனிவீர்காணுஞ்சந்நிதிதன்னில்யானு
மிகுந்திருவுடைமைபெற்றேன்மேலையோர்தம்முன்யாவர்
புகுந்துதாம்பொருந்தின்மிக்கபுண்ணியந்தன்னாலன்னோ
ரகந்தெளிந்தருளினீடுமறிவினாலும்பராவார்
வேறு
1271 சீருலாவுபிதிர்களுறுங்கதிசேருமாகதைசெப்புறுகிற்பவ
ரேருலாவுபொருட்பகர்கின்றவரீதுகாதினிறைத்திடுமன்பினோ
ரூர்கள்யாவுமொடுக்கிவிரைந்துவிணூடுலாவிடுமுப்புரம்வெந்திட
மூரன்முன்னம்விளைத்திடுமெம்பிரான்மோனஞானநன்முத்திபொருந்துவார்
சுச்சோதிபிதிர்களைமுத்தியடைவித்தசருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 1271
*****
பதினேழாவது
தீர்த்தச்சருக்கம்
1272 மறைநான்குமனங்கிடந்தவழுவிலருட்சவுனகவன்னக்கலாபப்
பொறிமயினின்றனவரதநடனமிடும்பொழிறிகழும் பூவணத்தி
னறைதருதீர்த்தங்கடமிலரும்பவநீங்கிடவாடுமான்மியத்தின்
முறைமைதனைமூவாறுபுராணமுனியுரைப்பனெனமொழிவதானான்
1273 சீரார்ந்தகார்த்திகைநற்றிங்களுறுந்தினந்தன்னிற்சேர்முன்வாரத்
தோராழித்தேர்வெய்யோனுதிப்பதன்முன்மணிகுண்டத்துந்தித்தான
நேராகநின்றவன்மந்திரநவிற்றிமூழ்குநர்தாநினைந்ததேய்ந்து
பேராதபெரும்பவநோய்பெயர்ந்ததன்பின்சிவலோகம்பெறுவரன்றே
1274 வனசமலர்மாளிகையின்வண்டிருந்தின்னிசைபாடும்வண்டானஞ்சேர்
தனைநிகரத்தடம்படிந்துதருங்கிருதமறையவர்க்குத்தானஞ் செய்வோர்
நினைவுதருநெஞ்சாலுநினைப்பருங்குன்மாதிவெந்நோய்நீங்கிவான்றோய்
கனைகதிராயிரம்பரப்புகனலிதனதுலகத்திற்கலந்துவாழ்வார்
1275 இரவிமணித்தேர்பூண்டவேழ்புரவியுததிநடுவேறும்வேலை
மருவியவத்தீர்த்தத்தின்மார்கழித்திங்கட்டிங்கண்மாதினோடு
மொருமையுடன்படிந்தாடுமுத்தமர்நற்புத்திரர்ப்பெற்றுவந்துவாழ்வார்
பரவுசிவமந்திரத்தைப் பன்னிமுன்னாட்படியிலரன்பதியிற்சேர்வார்
1276 உறைதருமத்திங்கடனிலொண்கலைசேர்பூரணையினோரைதன்னின்
மருவியவன்புடன்பிரமதாண்டவர்மாபூசைசெய்வோர்மகேசலோகத்
தொருபிரமகற்பமுறைந்துகாந்தத்தினுருத்திரனோடுற்றுப்பின்றைக்
குருமணிநல்விமானமேல்கொண்டுசிவலோகமதிற்குடியாய்வாழ்வார்
1277 பங்கமில்சீர்தருமாகத்திங்கடனில்விசேடித்தெண்டிசைபரப்பும்
பொருங்குகதிரோனுதயப்பொருப்பினிலேழ்பசும்பரித்தேர்பூட்டும்வேலை
யங்கவன்மந்திரநவிற்றியரன்றிருமுன்னருத்தியினோடாடுமாந்தர்
துங்கமுடன்பவமொழிந்துசுந்தமாயத்துவிதமுத்திசேர்வார்
1278 மைக்கிடமாங்கடன்முகட்டின்மான்றேரில்வாளிரவிதோறான்முன்சீர்
மிக்கசிவநிசியினந்தவேகவதிதனின்மூழ்கிவிழிதுஞ்சாது
நக்கனைநான்கியாமத்துநன்கருச்சித்தருந்தானநயந்தீவோரெண்
டிக்குபாலகர்பூசைதினம்புரியச்சிவபுரியிற்சேர்ந்துவாழ்வார்
1279 இப்பரிசங்கமர்ந்துறையுமெல்லையினெம்மீசனருளிருந்தவாறோ
மைப்படியுந்திருநயனவல்லிதவம்புரிதலத்தின்வண்மையேயோ
வொப்பரியநவமணிசேருயர்விமானமதேறியும்பர்சூழச்
செப்பரியவுலகமெலாந்திசைவிசயஞ்செய்தின்பந்திளைத்துவாழ்வார்
1280 மானவுயரிடபரவிதன்னின்மணிகன்னிகைவைசாகமாக
நானமதுபண்ணினர்கணவில்பலதானப்பலமுநண்ணிவாழ்வா
ரானவமுதோதகமாமத்தீர்த்தத்துற்றதக்கிணாயனத்திற்
பானுமதிதனையரவம்பற்றிடுநாண்மூழ்கினரப்பலத்தைச்சேர்வார்
1281 கொடுமறலிதனையிடறுங்குரைகழற்காங்கவனுயிரைக்கொள்ளையீந்த
கடுவடக்குங்கந்தரத்தெங்கண்ணுதலோன்றிருமுனிருகணைபோமெல்லை
நடுவறுநன்மாதவத்துவசிட்ட முனிவன்கண்டவசிட்டதீர்த்தம்
படிபவர்பண்பாடியறுபதந்துவைக்கும்பங்கயன்றன்பதத்தைச்சேர்வார்
1282 கனைகதிரோன்கடன்முகட்டேழ்கடும்பரிபூண்டிடுமான்றேர்கடாவும்வேலைத்
தினம்பொருபோர்க்களத்தசுரர்செங்குருதிமுடைநாறும்வச்சிரத்தான்
மனமகிழ்விற்றருகிருதமாலைமேலணிந்திலங்குமிந்த்ரதீர்த்தந்
தனிலுயர்பங்குனிதருமுத்தரமாடினோர்யாகபலத்தைச்சார்வார்
1283 பார்புகழீராறுதினம்படிந்தாடிற்சாகமகப்பலன்படைப்பார்
சோர்வறநற்றிங்களுவந்தாடினரச்சுவமேதபலத்தைத்துய்ப்பா
ரோர்கரநீரருந்தினரக்கினிட்டோமபலந்தன்னையுறுவர்நாளும்
பேர்பெறும்யாகாதிகன்மம்பேணாதபலன்மூழ்கிற்பெறுவரன்றே
1284 பூரணையிற்கலையொடுங்குங்குகுவதனிற்சங்கிரமந்தன்னிலிந்து
வாரமதினெடுத்துரைத்தமாதீர்த்தந்தொறுமூழ்குமாந்தரேய்ந்த
வார்கலிசூழுலகத்திலன்னையர்தம்முதரத்திலணுகாரம்ம
வோரினவருமாபதிதனுருவமடைந்திடுவரிமூதுண்மையாமால்
1285 மிக்கவறம்பொருளின்பம்வீடருள்வதாய்மேலாய்விமலமாகித்
தொக்கவரும்புண்ணியமாய்த்தொல்பதியாய்ப்பிதிர்கள்பவந்துடைப்பதாகித்
தக்கனருடவக்கொடிநற்றகுந்திருமால்சதுர்முகன்செங்கதிர்மார்க்கண்டன்
றிக்குலகம்வழிபடுமத்திருநகர்சேர்குநர்க்கரிதுசெப்பினின்றாம்
1286 நவின்றிடுவர்ணாச்சிரமநன்கடைவுபெறநாளுநாடியுள்ள
முவந்துபுரிகுற்றனரேலுரைக்கரிய பரமசிவனுருவமாவார்
தவந்தருமித்தலந்தன்னிற்றகுமிடையூறமூதடையாவகைகணேசன்
சிவந்தமுருகன்வடுகனிவர்பூசைசெய்யினிகறீர்ந்துவாழ்வார்
1287 புகலரியகேதாரமலைகாசிமாகாளம்புட்கரஞ்சீர்
திகழ்கமலாலயந்தில்லைவனந்தீதில்வேதவனந்திருவெண்காடு
மகிழ்தருதென்மதுரைதனின்மருவுகதியைப்பெறுவான்வைகுவோர்சேர்
மிகுபலமானவையனைத்துமேவுவர்பூவணநகரின்மேவுவோரே
1288 ஆதலினித்தலமெல்லாமத்தலங்கட்கதிகமெனவறையுமிந்தக்
காதைபுகழ்தருபிரமகைவர்த்தத்திரண்டுதலையிட்டவென்ப
தோதிடுமத்தியாயத்தினோர்ந்திடுகசவுனகவென்றுரைத்தான்மிக்க
மூதுணர்வின்மேதகுநல்வியாதனருண்மாணாக்கமுனிவர்கோமான்
வேறு
1289 ஆரிரும்பவமாற்றியவாக்கினாலாரணந்தெளிவுற்றிடுமந்தணீர்
சேருநன்பலதீர்த்தவிசேடமாஞ்சீர்தருங்கதைசெப்பிடுஞ்செஞ்சொலோ
ரோர்வுறும்படியோதியமேன்மையோரோர்ந்துசிந்தைகொளுத்திடுமன்பினோர்
பார்புரந்தருள்பார்த்திவராகியேபரவரும்பரமுத்திபொருந்துவார்
தீர்த்தச்சருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 1289
*****
பதினெட்டாவது
நளன்கலிமோசனச்சருக்கம்
1290 அரியவிரதம்பூண்டவந்தணராவையத்தோரங்கமாக
வுரைதருநல்லோருயிராயுறைகின்றசவுனகனையுற்றுநோக்கிப்
பரிவினுடன்பௌராணிகோத்தமனாம்பன்னுதவப்படிவச்சூத
னரபதியாநளன்கலிமோசனமானகாதைதனைநவில்வதானான்
1291 அருளுடனெண்டிசாமுகஞ்சூழங்கணுலகெங்கணுஞ்சென்றளப்பச்சொங்கோன்
மருவியமண்டலங்கொண்டமாகீர்த்திபுனைந்துமறைவரம்பினின்றோன்
விரவுமறம்பொருளின்பம்வீடடைவானருச்சனைசெய்விருப்பின்மேலோன்
கருதரியபரராசர்கனகமணிமுடியிடறுங்கமலத்தாளான்
1292 முழுதுலகந்தனிலேட்டினெழுதரியசதுர்வேதமுற்றுநாவோ
னழிவிலரனரியதிருவஞ்செழுத்தையுபதேசமருளாசானைப்
பொழிதருநன்மதுவாசப்புதுமலரிட்டருச்சித்துப்போற்றிநாளுங்
குழைவுறுமன்புடனகத்துக்குடியிருத்துங்கோதிறவக்குணக்குன்றன்னான்
1293 அடன்மிகுவெம்படைகாத்தலமைச்சரணட்புடனூக்கமறிவஞ்சாமை
தொடைபெறுநல்லியற்கல்விதூங்காமைதூய்மைதுணிவுடைமைவாய்மை
யுடனுரியகுடிபுறங்காத்தோம்பல்பகையொடுக்கலிவையுடைமைபூண்ட
கொடைமடம்பட்டிடுகோதில்குவலயங்கொள்குங்குமப்பொற்குவவுத்தோளான்
1294 முழங்குதிரைக்கடலுலகமுழுதுமொருமதிக்கவிகைமுறையிற்காத்து
வழங்குகலிவலிதொலைத்துமருவலர்தம்மாருயிரைவாங்கிமாந்திக்
கொழுங்கனற்செங்குருதிதனைக்குடித்துமிகக்குமட்டியெதிர்கொப்பளிக்குந்
தழங்கிலைவேனெடுந்தடக்கைதாங்குநளனென்றுரைக்குமோங்குபேரான்
1295 ஆளுமறைக்குலத்தினன்பினவதரித்தவருங்குலத்தினரசர்கோமா
னீளுமருளுடனோர்நாணித்தநியமக்கடன்கணிரப்பிச்செம்பொன்
வாளுறைசேர்நீள்சுரிகைமன்னீளக்கச்சையுடைமருங்குசேர்த்தித்
தாளதனிற்றொடுதோலுந்தகவீக்கிச்சட்டகமேற்கவசந்தொட்டு
வேறு
1296 கோட்டியசிலைக்கைதாங்கிக்கோதையங்குலியிற்சேர்த்தி
மூட்டியபேராவந்தான்முதுகுறப்பிணித்தியங்க
ளீட்டமெங்கணுந்துவைப்பவெண்ணருங்கருவிபம்ப
வேட்டையின்விரும்பிவேட்டுவேந்தர்களோடும்போந்தான்
1297 முடங்குவாலுளைமடங்கன்முருக்கியபுகர்முகஞ்சூழ்
கடங்களுங்கொடிகள்பின்னுங்கண்டகவனமுஞ்செந்தீப்
படர்ந்தெரிவதிற்செங்கஞ்சம்பலமலர்கின்றநற்பூந்
தடந்தருமிடங்களெங்குந்தகுவலைக்கண்ணிசேர்த்து
1298 பூண்டநாண்டொடர்ச்சிநீங்கிப்பொங்குகானெங்குந்தாண்டி
நீண்டவாலினைக்கொழித்துநேர்கடுங்காலினோடிக்
காண்டகுசெவிசிலிர்த்துக்கடுங்குரன்ஞமலிசூழத்
தூண்டியேதொகுவிலங்கின்றொகையெலாந்தொலைவுசெய்தே
1299 பச்சைவாம்பரியேழ்பூண்டபாழியோராழித்தேரோ
னுச்சியினேறும்வேலையுறுகதிர்தெறுதலாலே
நச்சிலையயில்வேலங்கைநளனனிவேட்டையாடி
யச்சிலைவேடரோடுமரும்பசியால்வருந்தி
வேறு
1300 நேடிப்பசுந்தேனிறைமலரினீடுஞ்சுரும்புபண்பாடு
மோடைப்புனலினாடியுவந்துச்சிக்கடன்றீர்த்துயர்தருக்கீ
ழாடற்பரியூரரசர்பிரானங்ஙன்பொதிசோறருந்தியுடன்
வேடப்படைகள்சூழ்தரவேவிரவோர்கன்னல்விழிதுயின்றான்
வேறு
1301 மாயிருஞாலத்தின்னல்வந்தடைந்திடவுமாக
மீயுயர்தருவினின்றுமேதனினிவீழ்வதாயுங்
காய்சினத்தரவந்தீண்டிக்காளிமங்கஞலத்தன்மெய்
தோயவுங்கனவுகாணூஉத்துண்ணெனத்துயிலுணர்ந்தான்
1302 துண்ணெனத்துயிலெழாமுன்சூழ்ந்திடுமமைச்சர்பாவ
புண்ணியம்புகலுமேனைப்புரோகிதர்விரவிப்போர்வே
லண்ணலிங்குற்றதென்கொலருளுதியென்னமன்னன்
கண்ணுறக்கண்டதீயகனாநிலைகட்டுரைத்தான்
1303 ஆங்கதுகேட்டோர்யாருமரசர்கோன்றன்மேற்பார்வை
தாங்கியோர்சரதமாற்றஞ்சாற்றுவார்தலைவவிந்தத்
தீங்குறுகனவுகண்டதீமைநீங்கிடநற்சாந்தி
பாங்கினாற்புரிதிபின்றேற்பலித்திடும்பகற்கனாவே
1304 ஆதலாலரும்பகற்கணரசர்கண்டுயிறலாகா
வோதிடின்வாதபித்தமுறுகனவந்தியாமத்
தேதமாம்வெந்நோய்சிந்தையெண்ணியதிடையினெய்துங்
காதல்கூரிராக்கடைக்கண்கண்டதுகருதினுண்டாம்
1305 கனைகடன்முகட்டின்வெய்யோன்கடும்பரித்தேரூர்காலை
நினைவுறுங்கனவோர்திங்கணிகழ்த்திடும்பகற்கணேருந்
தனைநிகர்தருமசேதாதனைவிடுகின்றவேலை
யினிவருகனவியம்பிலீரைந்துதினந்திற்சேரும்
1306 கழிதருகனவின்செய்திகாண்டியீதரசரேறே
வழுவறவியன்றதானம்வழங்கிடல்வேண்டுமின்றே
லழிதராதருளல்வேண்டுமறிகவெம்மரசென்றன்னோர்
மொழிதருசாந்திமன்னன்முடித்திலன்முந்தையூழால்
1307 சில்பகல்கழிந்தபின்னர்த்திகழ்மணிப்பூணினானுந்
தொல்பெருந்தானிகோட்டிச்சூதாடியாவுந்தோற்றே
யல்லலுற்றருஞ்சிறாரோடாந்தமையந்தியென்னும்
வல்லிமான்றனையுநீத்துமல்லல்சேர்வனம்புகுந்தான்
1308 புகுந்துகானகத்துநாப்பட்புந்தியையொருப்படுத்துத்
தகுந்திறன்மன்னன்றன்னந்தனியுடன்சாரும்வேலைப்
பகுந்தவாய்ப்பாம்பதாகிப்பகைகொடுநகுடனென்பான்
றிகழ்ந்தமெய்ப்புகழ்மான்றன்னைச்சீறியேதீண்டினானே
1309 சீறியேதீண்டலோடுந்தீவருமரம்போற்செந்தீ
வீறுயிர்நளன்றனக்குவெவ்வராவிடத்தைவீட்டிக்
கூறரிதாகியோங்கிக்கொழுந்துவிட்டெழுந்துமண்டி
மாறுசெய்நகுடன்றானும்வனந்தனின்மறைந்துபோனான்
1310 திவ்வியவழகின்மேலோன்றேசெலாமழுங்கிமாசாய்
வெவ்வராத்தீண்டியங்கம்விகிர்தமிக்குறவேமேவு
மவ்வினைதுஞ்சப்பின்னரறம்பிடித்துந்தலாலே
யெவ்வமுற்றிருதுபன்னனிடத்தவன்றொண்டினேய்ந்தான்
1311 அன்னவன்சின்னாளேகவருந்ததிகற்பினென்னத்
தன்னிகரெழிலினோங்குந்தமயந்திசொயம்வரத்துக்
கின்னருட்டலைவனாகியின்னறீர்ந்திருதுபன்ன
மன்னவன்றன்னோடேகிமாதினைவல்லைசேர்ந்தான்
1312 ஆங்கவன்பின்னுஞ்சூதங்காடிமுன்னவனைவென்ற
பாங்குடன்றனதுதொல்சீர்ப்படியெலாமடைவிற்கொண்டு
தீங்குறுங்கனவுவந்தித்தீமையைப்புரிந்ததென்னாத்
தாங்கியபூந்தார்மார்பன்றன்னுளங்கொண்டுமன்னோ
1313 தங்குதீர்த்தங்கடோய்வான்றமயந்தியென்னுமாது
மங்கலந்தருநன்மைந்தர்மந்திரித்தலைவர்சூழ
வெங்கணும்பரவுஞ்செம்பொனினமணித்தேரினேற்றிப்
பொங்குவெம்படையினோடும்புரவலன்கொண்டுபோந்தான்
வேறு
1314 கேதாரமவிமுத்தங்கிளத்துகயைபிரயாகைகிளர்வானோங்கும்
போதார்ந்தவடகானம்பொங்கியெழுங்காளிந்திபுகலவந்தி
காதார்ந்தகுழையனரித்துவாரமிகுமாளவமாகதங்கரகோல
மாதாரமாத்திநகர்பஞ்சாப்சரத்தோடாரணநற்கானம்
1315 பிறங்குகிருட்டினகானஞ்சடாயுதலஞ்சோமேசம்பீமகானஞ்
சிறந்திடுமஞ்சேசுரஞ்சல்லிகாயாவனங்கோகுரரேசந்தீதி
லறங்கரைநால்வேதவியாதாச்சிரமம்வெதிரிகாச்சிரமமாதி
கறங்குதிரைக்காவிரிசூழ்கருதுதிரிசிராக்கியமுங்கண்டுமன்னோ
1316 தெண்டிரைமோதிக்கறங்குந்தீர்த்தமவையாடியவன்மூர்த்திபேணிப்
பண்டருநற்குறுமுனிவன்பன்னுதமிழ்ச்சொன்மணக்கும்பாண்டிநாட்டில்
வண்டலெடுத்தலைபுரட்டும்வைகைநதியுடுத்தமதுராபுரேசன்
கண்டுறுசொற்சயனயனகர்ப்பூரநாயகிதாள்கண்டுபோற்றி
1317 கொடிமாடமதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டிலங்கும்
பொடிமூடுதழலெனவேபொருந்தியதென்பூவணத்திற்பொருந்திநாளும்
படிநீடுபுகழ்கொண்டபாதாளநாதனையும்பங்கிற்பச்சை
வடிவோடுமுடனாகிவளர்நாதவதிதனையும்வந்தித்தேத்தி
1318 முழுதுலகும்புகழ்தரமும்முரசுநின்றுமுழங்குமுன்றின்முழுவுத்தோளான்
வழுவில்பதிமகிமையையுமனத்துறுநின்மலத்தினையுங்கண்டுமுன்ன
மழிவுறவெஞ்சூதாடியலமரவெங்கலிநலியவகன்றிடாவெம்
பழிகழுவும்படிகுறித்துப்பரிமேதயாகத்தைப்பண்ணலுற்றான்
வேறு
1319 ஆதியந்தமிலாதவரன்றிருக்
கோதிலாதபொற்கோயிற்குடதிசை
யோதுகூவிளியெல்லையினோங்கவே
காதல்கூர்கனகத்தலக்கம்மியர்
1320 மாகநீணவமாமணிகொண்டுவே
தாகமப்படியாயிரந்தூணிறீஇப்
போகமன்னியபொன்னகரென்னவே
யாகமண்டபமேத்தவியற்றினார்
1321 மந்தமாருதமூரும்வசந்தநாட்
கந்துகம்பட்டங்கட்டிவிடுத்திசை
நந்தும்வேதியரோடுமந்நன்னளன்
றந்தவேள்வியஞ்சாலையிலேறினான்
1322 ஓடுவாம்பரியுற்றகுளப்படி
நாடியோமநயந்துபுரிந்துபொன்
னாடையாபரணங்களணிந்தணி
நீடுவேள்வித்தறியைநிறுவியே
1323 ஆண்டுதானென்றறைவபையாதியான்
மாண்டருங்கனல்வேள்வியமைத்தபின்
வேண்டுமாறுசுவையின்மிதவைமெய்
பூண்டவேதியர்பூசைபுரிந்தனன்
1324 ஆசிலவ்வருடாந்தத்தருந்தமிழ்
வாசமாமலயத்துமந்தாநிலம்
வீசுங்காலத்துமின்னனையோடும்வந்
தீசன்விண்ணவரேத்தவங்கெய்தியே
1325 மேவுமந்தமிகுந்திரையாயுக
மோவில்பல்புகழோங்குநளன்றனக்
கியாவுநல்கியிருங்கலிதீர்த்தருள்
பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்
1326 எந்தஞான்றுமிருந்துவிளைத்திடு
முந்துகாதலரோடுறுவைகையி
னந்தவேந்தனவபிருதப்பெயர்
தந்தநானமுந்தானமுஞ்செய்துபின்
1327 செங்கனற்றனைச்செய்துத்தியாபனம்
பொங்குபூவணத்தெம்புனிதன்றனக்
கங்கண்மாநிலமெங்கணுமாற்றவே
மங்கலோற்சவமன்னனுண்டாக்கினான்
1328 பிரமகைவர்த்தமாமிப்பெருங்கதை
சரதமூன்றுதலையிட்டவெண்பதா
முரியவத்தியாயந்தனிலோரர்திநீ
நரநளேந்திரநன்கலிமோசனம்
1329 இந்தநளன்கதை
சந்தமுடன்புகல்
சிந்தையுவந்தனர்
வெந்துயர்சிந்துவார்
நளன்கலிமோசனச்சருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 1329
*****