சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் : கவியரசு கண்ணதாசன் விழா I கம்ப தரிசனம்

வணக்கம்.
சிங்கப்பூர் அழைக்கிறது! இரண்டு நிகழ்ச்சிகள்:
1. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழா – 19.11.2022 சிங்கப்பூர் நேரம் மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரம் மதியம் 3.00 மணிக்கு) ‘கவியரசரின் பாடல்களில் இலக்கியச் சுவை’ என்னும் தலைப்பில் பேசுகிறேன். (ஆங்கில அழைப்பிதழில் நேரலைச் சுட்டி இருப்பதைக் காண்க).
2. 20.11.2022 ஞாயிறு சிங்கப்பூர் நேரம் மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரம் மாலை 4 மணிக்கு) லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் வழங்கும் என் “கம்ப தரிசனம்” நூல் வெளியீடு. இதில், சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர், மதிப்புக்குரிய திரு. கா.சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து என் நூலை அறிமுகம் செய்கிறார். (நேரலை ஏற்பாடு உறுதியானதும் தெரிவிக்கிறேன்).
சிங்கப்பூரில் உள்ள அன்பர்கள் அவசியம் வருக! மற்றோர் நேரலையில் இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்க!
அன்புடன்,
ரமணன்