மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா

தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களைப் படக்காட்சிகளாக விளக்கினார்கள். இவற்றை உணவுப் பொருள்களாகவும் உடனுக்குடன் சமைத்து அளித்தார்கள். பற்பல கடைகளும் அரங்குகளும் நிகழ்வுக்கு வலுச் சேர்த்தன.

2023ஆம் ஆண்டினைச் சர்வதேச சிறுதானிய ஆண்டாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சீரிய விழா குறித்து ஒரு சிறப்புப் பார்வை.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *