வாழ்வோடு கலந்த வண்ணத்திரைப் பாடல்கள்

வணக்கம்.

பழைய திரைப்படப் பாடல்களை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சி. அந்தப் பாடல்கள் இலக்கியத்தின் நீட்சி என்பது மட்டுமல்ல, நம் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதிபலிப்பவை.

கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை. உடுமலை நாராயண கவி, கு.ம. பாலசுப்பிரமணியம், மருதகாசி, மாயவநாதன், ஆலங்குடி சோமு என்று இன்னும் எத்தனை கவிஞர்கள், அவர்களுடைய பொருள் பொதிந்த வரிகளால் நம் வாழ்வோடு இணைந்து விட்டார்கள்!

அவர்கள் அனைவரையும் ஒருசேர நினைவு கூரவே இந்த நிகழ்ச்சி!

நடத்துவது யார்? பல அருமையான நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக, இடைவிடாமல் நடத்திவரும் The Humour Club International. ஏப்ரல் 9, ஞாயிறு மாலை 4.00 மணிக்கு, சென்னை Mylapore Fine Arts Club அரங்கில் தொடங்குகிறது. 5.00 மணிக்கு என் பேச்சு.

அன்புடன் இந்த வாய்ப்பை அளித்த நண்பர்கள் சேகருக்கும், கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வாருங்கள்!

அன்புடன்,
ரமணன்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *