செண்பக ஜெகதீசன்
வாசனையைச் சுமந்து
வலம் வந்ததிலே
வந்தது புது வம்பு-
தென்றலுக்குத் தெரியவில்லை
தூது போகிறோம் காதலுக்கு
என்பது..
பாதை தெரிந்து
புறப்பட்டது வண்டு..
பூங்காவில்,
புதுக்காதல் அரங்கேற்றம்…!
படத்திற்கு நன்றி: http://www.telegraph.co.uk/earth/wildlife/5437970/More-wild-flowers-to-be-planted-to-save-honey-bees-says-WI.html
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…