ஈழம் ஈந்த கட்டடக் கலைஞர் வி. எசு. துரைராசா காலமானார்

0

மறவன் புலவு

கடந்த இரு மாதங்களாக நோயுற்றுப் படுக்கையில் இருந்த அவர் இன்று 14.12.2011 காலை (இந்திய நேரம் 0500 மணியளவில்) ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து துயறுற்றேன்.

கடந்த வாரத்தில் சிட்னியில் மூன்று நாள்களும் தொடர்ந்து சென்று அவரைப் பார்த்துப் பேசி வந்தேன். என் வருகையால் உற்சாகமடைந்ததாகக் கூறினார். நெஞ்சம் நெகிழ்க்கும் நினைவுகளைப் பகிர்நதோம்.

கைதடி இந்து இளைஞர் மன்றம் அமைக்கவிருந்த சைவ அனாதை இல்லக் கட்டடத்துக்கு வரைபடம் வரைந்து தருமாறு கேட்டு 1973இல் முதன்முதலாக அவருடன் தொடர்புகொண்டேன்.

அதைத் தொடர்ந்து 1974 தையில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு அமைப்புக் குழுவில் இணைபிரியது அவருடன் பணியாற்றினேன். தொடர்புகள் தொடர்ந்தன.

1977இல் தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளராகப் பணி புரிகையில் திரு. வி. எசு. துரைராசா தந்த வரை படத்தையே 100 அடி உயரத் தந்தை செல்வா நினைவுத் தூணாக யாழ்ப்பாணத்தில் கட்டி எழுப்பினோம்.
அவருடன் பணிபுரிந்த காலங்கள் பசுமையானவை.

பின்னர் அவரின் உந்துதலால் ’எனது யாழ்ப்பாணமே’ என்ற நூலை ஏமன் தலைநகரம் ஏடனில் இருந்தவாறு எழுதி முடித்தேன். யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு அந்த நூல்.

ஈழத் தமிழர் வரலாற்றில் அவர் பங்களிப்புப் பல பதிவுகள் நிறைந்தது. யாழ்ப்பாண நூலக மீளமைப்பு அவரது நெஞ்சார்ந்த பங்களிப்பு. அதையொட்டிய அவரது நூல் வரலாற்றுப் பதிவு.

அவர் பிரிவால் வாடும் அவர் அன்பு மனைவி, மகள், மகள்கள் யாவரின் துன்பத்திலும் துயரத்திலும் பங்குகொள்கிறேன்.

அவரது இல்லத் தொலைப்பேசி. 0061297449599
துயரச்செய்தியை அவரது இல்லத்தாருடன் பகிர விழைவோர் அனுப்பவேண்டிய நண்பரின் மின்னஞ்சல் முகவரி. நிமலன் <nemo092008@gmail.com>.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.