வெள்ளிப் பூந்தோட்டம்
ஜெ.ராஜ்குமார்
வெள்ளி ஓடைகள்
துள்ளிப் போகுதே – வேதனைகளைத்
தள்ளிப் போட்டதே…
பூத்திடும் ஒவ்வொரு பூவிலும் – தன்
புன்னகை சேர்த்ததே!
பொங்கிடும் கங்கையும் – வெண்
பொங்கலாய் ஆனதே!
வானவெளியிலே வட்டம் இட்டதே
நிலவு என்றொரு மலர் மலர்ந்ததே!
புள்ளிக் கோலங்கள் போட்டு விட்டது
நட்சத்திரங்களாய் மாறிப் போனது!
வானமே –
வெள்ளிப் பூந்தோட்டமாய்க் காட்சி தந்தது!
படத்திற்கு நன்றி: http://downloads.zdnet.com/abstract.aspx?docid=803971