செண்பக ஜெகதீசன் 

ஆண்டு முடிகிறது,

ஆண்டாண்டு காலம்

அழியாமல் வாழ்வோமென

ஆசையில் அழிகிறான் மனிதன்..

முற்றும் துறந்ததாய்ச் சொல்பவனும்

முழுதும் திறப்பவனும்

மறந்து விடுகிறான் இறப்பினையே..

இவனுக்கு மட்டும் வராதாம்

இறப்பு..

இப்படித்தான் நினைக்கிறான்,

தப்பாய்ச் செய்து

தரணியைப் பாவத்தால் நனைக்கிறான்..

சிரத்தில் பாரத்தை ஏற்றிக் கொண்டால்

சிரமப்பட்டுதானே ஆக வேண்டும்…!

 

விட்டு விடு,

வேண்டாம் வீண் வேலை..

இறப்பை மறந்தவனை

இறைவன் பார்த்துக் கொள்வான்…!

 

படத்திற்கு நன்றி: http://theteawitch.blogspot.com/2011/06/meditation-monday-giddy-and-distracted.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *