செண்பக ஜெகதீசன்
புயற்காற்றே
பெருமிதம் கொள்ளாதே,
பூக்களையும் செடிகளையும்
பூண்டோடு அழித்து விட்டாய்..
மாண்டு விடவில்லை நாங்கள்,
மீண்டும் வருவோம்..
உன்னால் முடியாது
எங்கள்
விதையை அழித்திட..
அது,
விதித்தவன் கட்டளை…!
படத்திற்கு நன்றி:http://www.csiro.au/en/Outcomes/Climate/Understanding.aspx
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…