வளையல் துண்டுகளின் காட்சி

0

அன்பாதவன்
anbaathavan
அருகருகே தொடர்கிறது
நம் பயணம்.
சுவாரஸ்ய மவுனத்தோடும்
சுகமான நினைவுகளுடனும்
தண்டவாளங்களைப் போல
தகுந்த இடைவெளியோடு.

உடைந்த வளையல் துண்டுகளாய்
வீழும் உரையாடல்களைக் குலுக்க,
மனசின் முப்பட்டைக் கண்ணாடியில்
திரள்கின்றன புதுப் புது பொழிப்புரைகள்.

’பசிக்குதுடா’ – என்ற கெஞ்சலில்
எட்டிப் பார்க்கும் உன்னுள்
ஒரு குழந்தை.

பசியறிந்து ஊட்டிய விரல்களிலிருந்து
வழியுமுன் கடவுளின் மனிதம்.

சொல்லதிகாரம் திரண்ட
கட்டளைகளில்
நிமிர்ந்த பனையென உன்
ராட்சசம்.

சொல் செல்லமே
யார்தான் நீ?

=====================

படத்திற்கு நன்றி: அம்ருதா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *