பிப்ரவரி 21 – உலகத் தாய்மொழி நாள்
பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த செய்தி, நம்மில் பலருக்குத் தெரியாது. நம் தாய்மொழியின் மீது நாம் கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பு இது.
இதை முன்னிட்டு, கோவையில் தமிழ் ஆர்வலர்கள், பிப்ரவரி 21 அன்று ஊர்வலமாகச் செல்கிறார்கள்.
இடம்: காந்திபிரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கி, சிதம்பரம் பூங்கவில் நிறைவு பெறுகிறது.
தலைமை: தவத்திரு மருதாசல அடிகளார்
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்ரமணியம், ஊர்வலத்தினைத் தொடங்கிவைக்கிறார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சி.சுவாமிநாதன் உரையாற்றுகிறார்.
நம் தாய்மொழி மீது பற்றுக் கொள்வோம். அதனைப் பிறர் பின்பற்றும் வகையில் வெளிப்படுத்துவோம்.
================================
தகவல் – பேராசிரியர் விசயராணி, திருச்சி