செண்பக ஜெகதீசன்
இடரும் பகையும் விலகிடுமே -நம்
   இறைவன் முருகன் வரவினிலே,
சுடராய் ஒளிரும் பேரழகே -கொடும்
   சூரனை வென்றிடும் வேலழகே..
                                       –இடரும்..

கடற்கரை செந்தில் சுடரொளியே -நம்
   கந்தக் கடவுள் அருளொளியே,
இடரினை அகற்றிடும் இன்னமுதே -வான்
   இந்திரன் மருகன் சுந்தரனே..
                                      –இடரும்..

வள்ளிக் கணவா வேல்முருகா -எம்
   வாட்டம் போக்கிடும் மால்மருகா,
அள்ளி அருள்தரும் வள்ளலோனே -நம்
   அன்னை உமையவள் பாலகனே..
                                       –இடரும்..

தினம்தினம் விழாவரும் செந்தூரிலே -உனைத்
   தேடி வந்திடில் நலம்வருமே,
வனத்தினில் வள்ளி மணவாளா -உனை
   வணங்கிடில் வராதே பேரிடரே..
                                        –இடரும்..

வரவர அருள்தரும் திருமுருகா -உனை
   வழிபட வந்திடும் திருவருளே,
சிரமது ஆறுடை சிவன்மகனே -உனை
   சிந்தையில் கொண்டே சிறப்படைவோம்..
முருகா உனை
   சிந்தையில் கொண்டே சிறப்படைவோம்..
                                              –இடரும்..

 படத்துக்கு நன்றி

http://www.halfbakery.com/idea/Peacock_20Hair_20Fanning_20Clip
                      

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "முருகன் வரவிலே.."

  1. இறையருள் பொங்கும் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள் ஐயா!

  2. அன்புக்கினிய இளங்கோ
    அவர்களின் பாராட்டுரைக்கு
    அளவிலா மகிழ்ச்சி…!
              நன்றியுடன்,
           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.