செண்பக ஜெகதீசன்

 

சுதந்திர தினம்-

சிதறிடும் சிந்தனைகள்..

 

பாலர்க்கு-

பள்ளி விடுமுறை,

பகிர்ந்தளிக்கப்படும் இனிப்புக்கள்..

 

பெரியவரில் சிலர்க்கு-

பெற்றுவிட்ட சுதந்திரம்..

பலர்க்கு-

படுத்துறங்க வாய்ப்பு..

 

சிணுங்கும் பெண்களுக்கு-

சீரியல்கள் அவுட்..

 

அரசியலார்க்கு-

அடுத்தடுத்து

ஆதாய நிகழ்ச்சிகள்..

 

காவலர்க்கு-

கண்காணிப்பு,

வெடிகுண்டு வேட்டை..

 

ஏழைக்கு-

என்றும்போல

இதுவும் ஓர்

எதிர்நீச்சல் நாளே…!

 படத்துக்கு நன்றி

 http://makanaka.wordpress.com/tag/food/    

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஏழைக்கு மட்டும்..

  1. தங்களின் கவிதை யதார்த்த உண்மையென்றால்…அதற்கு இடப்பட்டுள்ள படம் வெகு அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.