திருப்பூர்த் தாய்த் தமிழ்ப் பள்ளியில் படைப்பாற்றல் கண்காட்சி
தமிழினி
பல்லாயிரக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள், இன்று கண்டுபிடிக்கப்பட்டாயிற்று. அறிவியல் ஆக்கத்திற்கா, அழிவிற்கா என்பதைத் தாண்டி, அனைத்துச் செயல்பாடுகளும் இன்று மனிதச் செயல்பாடுகள் அன்றி, இயந்திரச் செயல்பாடுகள் ஆகிவிட்டன. அனைத்துக் கண்டுபிடிப்புகளும் படைப்பாற்றலினால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களிடையே புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் விதமாக, திருப்பூர் வள்ளலார் நகர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் 04.04.2011 அன்று படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் படைப்பாற்றல், அறிவியல் சிந்தனை, ஓவியத் திறன்கள் வெளிப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் எடுத்த சில படங்கள் இங்கே: