எழில் மிகு அலைமகள்
கவிநயா
மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்
அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்
மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்
எழில்மிகு அலைமகள்! (அடானா ராகத்தில் சுப்பு தாத்தா)
படத்திற்கு நன்றி :
http://www.astromuni.com/puja/mlk.asp