முகில் தினகரன்

அத்தியாயம்  – 17

தேவி அவ்வாறு கேட்டதும்,

சுந்தர் தவித்தான்….துடித்தான்…அந்த விநாடியே தன் உயிர் போய், தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடாதா? என எண்ணி எண்ணி மாய்ந்தான்.

‘ஏற்கனவே இவ கல்யாணத்துக்காக நான் ஒரு கிட்னிய வித்துட்ட விபரத்தை யாருக்கும் தெரியாம மறைச்சு வெச்சிருக்கேன்… இப்ப திருடனுக்குத் தேள் கொட்டின கதையா இவளே தன் புருஷனுக்காக என்கிட்ட கிட்னி தானம் கேட்கிறாளே!…நான் என்ன பண்ணுவேன்?…எப்படி அந்த உண்மையைச் சொல்வேன்.?”

முகம் வெளிறிப் போய் நின்ற சுந்தரை ஊடுருவிப் பார்த்த தேவி, ‘என்னண்ணே..நான் கேட்டுட்டே இருக்கேன்…நீ பதிலே பேசாம வேற எங்கியோ யோசனை பண்ணிட்டிருக்கே?”

‘இல்லம்மா…அது…வந்து….இப்ப…இப்ப…நான்…மா;ப்பிள்ளைக்கு கிட்னி தானம் குடுக்க முடியாத நிலைல இருக்கேன்மா… அதான்..அதைப் பத்தித்தான்…யோசனை..” தட்டுத் தடுமாறி அவன் சொல்லி முடிக்கையில், அவனே கண் கலங்கி விட்டிருந்தான்.

‘விருட்‘டென்று அவனை நிமிர்ந்து பார்த்த, ‘என்னண்ணா…என்ன சொல்றே?… முடியாதுன்னா சொல்றே?” கொஞ்சமும் நம்ப முடியாதவளாய்க் கேட்டாள்.

அவன் மௌனம் சாதிக்க,

‘அண்ணா…ஒரு காலத்துல நான் எது கேட்டாலும் தட்டாமச் செய்வே!…எனக்காக எதையும் விட்டுக் குடுப்பே!….உனக்கு ஞாபகம் இருக்கா?..பள்ளிக் கூடத்துல டீச்சர் வீட்டுப்பாடம் செய்யாமப் போனா அடிப்பாங்கன்னு ராத்திரி பூராவும் உட்கார்ந்து என்னோட வீட்டுப்பாடங்களை கையொடிய எழுதிக் குடுத்திட்டு…காலைல உன்னோட டீச்சர்கிட்டப் போய் உன் வீட்டுப்பாடத்தை எழுதாதற்காக நீ அடி வாங்கிக்குவியே!…அந்த அண்ணனா? இப்ப நான் கேட்டும் மறுப்பது?”

‘அய்யோ…தேவி…இப்படியெல்லாம் பேசாதம்மா!”

‘அண்ணா…நான் உன்னை விட்டா வேற யாருகிட்டண்ணா போய்க் கேட்பேன்?… எனக்கு உன்னையத் தவிர வேற யாரைண்ணா தெரியும்?”

அவள் அழுவதையும், அவன் சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடுவதையும்  அந்த வழியே நடந்து சென்ற இருவர; வித்தியாசமாய்ப் பார்த்தபடியே சென்றனர்.

‘ஆண்டவா…நான் என்ன சொல்லி இவளுக்குப் புரிய வைப்பேன்?…என் தங்கமே….உன் புருஷனுக்கு கிட்னி குடுக்க எனக்கு மனசு இருக்கும்மா… ஆனா…கிட்னிதாம்மா இல்லை!” மனசுக்குள் கதறினான்.

புத்து நிமிடம் அழுது ஓய்ந்தவள், ‘சரிண்ணா பரவாயில்லைண்ணா… எனக்கு வேணா என் புருஷன் உயிர் பெரிசா இருக்கலாம்…உனக்கு உன் உயிர்தானே பெரிசு!… ஹூம்…என் கிட்னி வேற பொருந்தாமப் போச்சு… இல்லேன்னா…நானே கொடுத்திருப்பேன்… இப்படி கண்டவங்க கிட்டக் கெஞ்சிட்டிருக்கற நிலைமையே வந்திருக்காது!”

‘தே…வீ…” அவன் கத்திய கத்தலில் அந்த வராண்டாவில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தவர;கள் திடுக்கிட்டுக் திரும்பினர;.

‘என்ன…என்ன வார;த்தை சொல்லிட்டே தேவி…என்னையா கண்டவங்கன்னு சொல்றே?..நான் உன்னோட அண்ணன்மா!…உனக்காக உடல்…பொருள்…ஆவி…அத்தனையையும் குடுக்கத் தயங்காத அண்ணன்மா!”

‘ஆனா..கிட்னி மட்டும் தரமாட்டே!….அப்படித்தானே?”

சுந்தர; நொந்து போனான். ‘நான் என்ன செய்வேன்?…எப்படி இவகிட்ட என்னோட நிலைமைச் சொல்வேன்?” தவித்தான்.

சில நிமிட அமைதிக்குப் பின், நீண்ட பெருமூச்சு விட்ட தேவி, ‘எனக்கு ஏண்ணா கல்யாணம் பண்ணி வெச்சே?…நானா வந்து உன்கிட்ட ‘எனக்குக் கல்யாணம் பண்ணி வை”ன்னு கேட்டேன்?…நீயே பாத்து இப்படியொரு நோயாளிப் புருஷனை என் தலைல கட்டி வெச்சிட்டு…இப்ப ‘எனக்கென்ன?…நீயாச்சு…உன் புருஷனாச்சு”ன்னுட்டு திரும்பிக்கிட்டுப் போறியே…இது நியாயமா?”

‘தேவி…வேண்டாம்மா…இப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதம்மா”

‘பேசுவேன்..நான் பேசுவேன்…என்னால பொறுக்க முடியலை…அதான் பேசறேன்…எல்லோரோட சுயரூபமும் இப்பத்தான் தெரியுது!…’தங்கச்சி…தங்கச்சி”ன்னு தேனொழுகப் பேச மட்டும் தெரியும்!…அதே அவளோட தாலிக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது உதவ மனசு வராது!…பாசமாவது மண்ணாங்கட்டியாவது…எல்லாம் வேஷம்…மோசம்…”

தன் கணவன் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் எந்தப் பெண்ணுமே இப்படித்தான் பேசுவாள்!…அதற்கு தேவி ஒன்றும் விதி விலக்கல்ல, என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால் சுந்தருக்கு அவள் மேல் போபமே சிறிதும் தோன்றவில்லை…மாறாய் பரிதாபம்தான் ஏற்பட்டது.  இந்தச் சூழ்நிலையில் அவளுடன் மேலும் மேலும் பேசுவது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்து இதை விடத் தாறுமாறாய்ப் பேச வைத்துவிடும் என்பதை உணர;ந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

‘போறான் பாரு!…நான் பேசிக்கிட்டேயிருக்கேன் போறான் பாரு!…நான் எக்கேடு கெட்டா இவனுக்கென்ன?…நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு நின்னா பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவும் இல்லையா?”

பீறிட்டு வந்த அழுகையை பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கியவாறே ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினான் சுந்தர;.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *