நான் அறிந்த சிலம்பு – 49 (10.12.12)

 

மலர்சபா

 

புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

மாதவி கோவலனுடன் வீற்றிருத்தல்
ஆங்கே,
கடலின் புலால் நாற்றம்…
அதை மாற்றி
நறுமணமாக்கிய
மடல்கள் அவிழும்
பூக்களை உடைய
தாழை மரங்கள்
வேலியெனச் சூழ்ந்திருந்து
காவல் புரிந்த
ஓர் இடத்தினில்……….
ஓர் ஒப்பற்ற புன்னை மர நிழலில்
அழுக்கேதும் அற்ற புதுமணற்பரப்பில்
சித்திர வேலைப்பாடுக்ள் அமைந்த
திரையதனைச் சுற்றிலும்
வளைத்துக் கட்டப்பட்ட
கூடாரம் ஒன்று அமைந்திருந்தது..
அதனுள்
மேற்கட்டு விதானத்துடன் கூடிய
வெண்மையான தந்தத்தால் செய்த
கட்டில் ஒன்று இடப்பட்டிருந்தது.
பயணக்களைப்பால்
வருந்தியிருந்த வாடியிருந்த
வசந்தமாலையின் கையில் இருந்த
திருந்திய நரம்பினையுடைய
நல்யாழ் அதனை,
மலர்நெடுங்கண் மாதவி
செவ்வனே வாங்கிக்கொண்டு,
அக்கட்டிலில் முன்கூட்டியே அமர்ந்திருந்த
கோவலன் அவனொடு சேர்ந்து அமர்ந்தனள்.
வெண்பா
கடற்கரையிலுள்ள
மடலவிழ் தாழையின் உள்ளே செறிந்த
வெண்மையான இதழ்களில்,
மாலைப்பொழுதில் தேனுண்டு உறங்கிய
நீலநிற வண்டுகள்,
காலைப் பொழுதில்
களிப்பு தரும்
தேனையும் பூந்தாதினையும்
ஊதும்படியாக
அழகிய தெளிந்த நிறத்தையுடைய
காலைக்கதிரவனின் தேர் அதுவும்
இளங்கதிர்களை வீசியே
கீழ்திசையில் மெல்ல எழுந்தது.
(கடல் ஆடு காதை முற்றிற்று.)
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 166 – 178
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram17.html
படத்துக்கு நன்றி:
http://www.indiamart.com/taluka-tent-overseas/royal-samode-tent.html
Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *