சு.கோதண்டராமன்

ஏழு அடி வைப்பது எதற்காக?

இரு மனம் இசைந்து ஒன்றாக.

முதலடி வைக்கையில் வேண்டுவதோ

முகுந்தன் அருளால் மிகு உணவு.

 

இரண்டாம் அடியை எடுப்பது

இலட்சுமி நாயகன் புஷ்டி தர

மூன்றாம் அடியை வைக்கும்போது

முராரி காப்பான் விரதங்களை.

 

நான்காம் அடியை வைப்பதனால்

நாரணன் அளிப்பான் நல்ல சுகம்.

ஐந்தாம் அடியால் வேண்டுவது

அரியின்  அருளால் பசுச் செல்வம்.

 

பருவ காலங்கள் துணை புரிய

பிரார்த்திப்பது தான் அடுத்த அடி.

ஏழாம் அடியை வைப்பதனால்

இறைவனிடம் வேண்டும் வரம் என்ன?

 

கணவன் செய்யும் நற்பணிகள்

காரியம் யாவினும் கைகொடுக்க

கண்ணபிரான் அருள் பின் தொடர்க.

 

ஏழடி நடந்த நீ என் தோழி.

என்றும் விலக்கோம் நம் நட்பை.

சிந்தனையில் நாம் ஒன்றாவோம்.

செயலிலும் நாமினி ஒன்றாவோம்

உள்ளத் தூய்மை அன்புடனும்

ஒன்றாய் இன்பம் அனுபவிப்போம்.

 

இருக்கு வேதம் நீ என்றால் இசைக்கும் சாமம் நான் ஆவேன்

பொறுக்கும் பூமி நீ என்றால் பொழியும் வானாய் நானிருப்பேன்

விளையும் வயலாய் நீ இருப்பாய். விதையாய் உன்னுள் மறைந்திடுவேன்

செல்லும் வாக்காய் நீ இருக்க, சிந்தனை மனமாய் நான் இருப்பேன்

 

இன்சொல் நங்காய் என்னிடம் வருக.

நன்மக்கள் பேறும் நலிவிலாச் செல்வமும்

பெற்று நாம் வாழ்வோம், பெரும் புகழ் அடைவோம்

படத்துக்கு நன்றி

https://picasaweb.google.com/lh/photo/hjO-U6-l75FB2KaN6EwPVg

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.