மகாத்மா காந்தி அஞ்சலி
சத்தியமணி
காந்தியின் இதழ்கள் விரிந்திடும் பணத்தாள்களில் தாம்பதிந்ததால்
காந்தியின் இமைகள் கலங்கிடும் கள்ளநோட்டுகளிலும் பதிந்ததால்
காந்தியின் இதயம் களித்திடும் புதுமைமங்கையர் சிறப்பினால்
காந்தியின் இதயம் அழுதிடும் அவநிலையில்பெண் நிகழ்வினால்
காந்தியின் உள்ளம் நிறைந்திடும் இந்தியஅறிவின் பெருமையால்
காந்தியின் உள்ளம் உடைந்திடும் ஊழல்வஞ்சனைப் பெருக்கினால்
காந்தியின் கால்களும் குதித்திடும் அரிசனங்களின் வளர்ச்சியால்
காந்தியின் கால்களும் வலித்திடும் வரிசரங்களின் சுமையினால்
காந்தியின் கரங்களும் உயர்ந்திடும் உலகில்பாரதப் புகழினால்
காந்தியின் கண்களும் அழுதிடும் அரசியல்தரத்தின் மலிவினால்
காந்தியின் ஆத்மா வியந்திடும் இளையபாரத துடிப்பினால்
காந்தியின் சாந்தி விசும்பிடும் தருமநெறிகளின் தளர்வினால்
ஹே ராம் ! ஹே ராம் !
படத்திற்கு நன்றி:
http://www.nellaieruvadi.com/india/india_rare_photos2.asp

Nicely written. Proud to have you with us
Mihavum arumai.
Nandrigal- Anbudan