நான் அறிந்த சிலம்பு – 57 (04.02.13)

மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

முரி வரி
பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்
                        
                    (14)
என் தோழனே!
பூம்பொழில் தருகின்ற நறுமண மலர்
அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்
அங்கே நின்றிருந்த தலைவியின்
குற்றமற்ற இனியமொழி
பருத்த இளமையான அழகிய மார்புகள்
முழுமையான மதிபோன்ற முகம்
வளைந்து நின்ற புருவமாம் இருவில்
அழகை எழுதுவதற்கரிய மின்னல் இடை
இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தன.
                     (15)
என் தோழனே!
அலைகள் பரந்த நீர்த்துறை
அழகிய மணற்பரப்பு
மணம் அவிழ்க்கும் நறுமண மலர்
மலர்கள் நெருங்கிய சோலை
அங்கே நின்றிருந்த தலைவியின்
மணம் விரவிய சுருள் கூந்தல்
மதி போலும் அழகிய முகம்
இரண்டு கயல்கள் போன்ற இருவிழிகள்
இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
                      (16)
என் தோழனே!
சங்குகள் வளரும் துறை
மணம் பரந்து விரிகின்ற சோலை
கட்டவிழ்ந்த மண மலர்கள்
ஆங்கு அவள் தனித்து உலாவுகின்ற இடம்
முளை போல வளரும் பல்வரிசை
நிறைமதி போன்ற முகம்
இளமைப் பருவத்தினளது
இணைந்த மார்புகள்
இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html
படத்துக்கு நன்றி:
http://www.artistportfolio.net/index.php?secret=160&artist_id=17229&image_id=111729
Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *