அவனை மறக்காதே…
ஆடுகள் அடித்துக்கொண்டால்,
அதிலே ஆதாயம்
அடுத்துவரும் ஓநாய்களுக்குத்தான்..
காய்ந்த எலும்பைக் கடிக்கும்
வேட்டைநாய் ருசித்திடும் இரத்தம்
வேறல்ல-
அதனுடையதுதான்..
தனிமரங்களின் கூட்டம்தான்
தோட்டம்-
தாக்குதல் அதிகம்தான் தனிமரத்திற்கு..
நாணல்கள் வளைவது
நாணமுற்று அல்ல-
நாளை வாழ்வை
நலமுடன் தொடரத்தான்..
நாணலானாலும், நெடுமரமானாலும்,
ஆடுகளானாலும்,
அடித்திடும் ஓநாயானாலும்,
படைத்தவன் இறைவன்..
அவனை மறந்திடில்,
ஆவது ஒன்றுமில்லை…!
படத்துக்கு நன்றி
http://templetonpress.org/content/hand-god