செண்பக ஜெகதீசன்

ஆடுகள் அடித்துக்கொண்டால்,
அதிலே ஆதாயம்
அடுத்துவரும் ஓநாய்களுக்குத்தான்..

காய்ந்த எலும்பைக் கடிக்கும்
வேட்டைநாய் ருசித்திடும் இரத்தம்
வேறல்ல-
அதனுடையதுதான்..

தனிமரங்களின் கூட்டம்தான்
தோட்டம்-
தாக்குதல் அதிகம்தான் தனிமரத்திற்கு..

நாணல்கள் வளைவது
நாணமுற்று அல்ல-
நாளை வாழ்வை
நலமுடன் தொடரத்தான்..

நாணலானாலும், நெடுமரமானாலும்,
ஆடுகளானாலும்,
அடித்திடும் ஓநாயானாலும்,
படைத்தவன் இறைவன்..
அவனை மறந்திடில்,
ஆவது ஒன்றுமில்லை…!

படத்துக்கு நன்றி

http://templetonpress.org/content/hand-god   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *