சு. கோதண்டராமன்
இரவு மணி எட்டு

விசிறிகள் சுழல, விளக்குகள் ஒளிர,

வீடு தோறும் தொக்கா முழக்கம்.

போட்டிப் பெருங்குரல் மாணவர் படிப்பு.

உலகமே சுறுசுறு, ஓய்விலா இயக்கம்.

 

திடீரென மின்சாரம் நின்றது.

 

விளக்குகள் அணைந்தன,

தொக்கா ப்ரிட்ஜுடன் க்ரைண்டரும் வாய் மூட,

வீட்டுக்குள் கொசுக்கடி, வெளியே வந்தோம்.

வானம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

இத்தனை விண்மீனா! ஈதென்ன விந்தை!

முத்துகள் வயிரங்கள் பதித்த பட்டுடையோ!

வெள்ளி முலாம் பெற்ற தென்னையோ பேரழகு!

கண்களைக் கூசாத கவினுறு நிலவொளி!

இயற்கைத் தென்றலின் இதமான தழுவல்!

 

ஐந்து நிமிடம் கழித்து-

 

மின்சாரம் வந்தது.

உறைந்த உலகு உயிர்பெற்று எழுந்தது.

விட்ட சீரியல் தொடர வேண்டும்,

விடிந்தால் தேர்வு படிக்க வேண்டும்,

எல்லோரும் பறவை போல் தத்தம் கூட்டில்.

மீண்டும் இயந்திரமாயினர் மக்கள்.

படத்துக்கு நன்றி

http://kashmirobserver.net/news/power-cut-dismays-consumers

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *