சத்தியமணி
கொடுப்பதும் நானே கொள்வதும் நானே
இடையினில் உமதென்று சொல்வது வீணே
மறைப்பதும் நானே தெரிவதும் நானே
மறந்தாய் மனிதா! உன் மனதிலும் நானே()
விண்ணாய் பரந்து இருப்பவன் நானே
மண்ணாய் கலந்து உண்டவன் நானே
எண்ணம் சுரந்து கொடுத்தவன் நானே
எளிதாய் எதிலும் கிடைப்பவன் நானே ()
அன்பாய் இருந்தால் இருப்பவன் நானே
அசுரத் தனங்களை அழிப்பவன் நானே – எதையும்
என்பால் விடுத்தால் காப்பவன் நானே
உன்மேல் கீதை உரைக்க வந்தேனே ()

Leave a Reply