தேசிய இளைஞர் படைக்கு ஆள் சேர்ப்பு
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேரு இளையோர் மையத்தின் சென்னை பிரிவு தேசிய இளைஞர் படையில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
18 வயது முதல் 25 வயது வரையுள்ள இருபால் இளைஞர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சேர விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விபரங்களையும் இணைத்து விண்ணப்பத்தை 15-5-2011-க்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்,
நேரு யுவகேந்திரா, எண் 16ஏ,
முதல் குறுக்குத் தெரு,
நியூ காலனி, வேளச்சேரி,
சென்னை – 600 042
மேலும் விபரங்களுக்கு 044-22435786 என்ற தொலைபேசியில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளரை அணுகவும்.
==================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை