சமைத்திட விரும்பி
தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
இட்டரைத்தேன் மெல்லென
சிந்தையம்மியில் நான்!
சரியாய்த் துலங்கின
சிறுகதை ஒன்றும்
சொல்லடை இரண்டும்!
உருசியாய் இருக்கிறதாம்
எதிரில் நின்று பகர்ந்தாள்
சிறுகதையைத் தின்ற
என்வீட்டுக் கண்ணாட்டி!
சுவையாய் இருக்கிறதாம்
சொல்வது யாரெனில்
அடையில் ஒன்றைத் தின்ற
தமிழ்ச்சங்கத் தலைவன்
செவலை மாடன்!
அந்த எஞ்சிய அடையும்
எப்படியிருக்கிறது
சொல்லிவிடலாமே
அதைத் தின்னும் நீங்கள்?!
முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html
அட! அட!
அடை! அடை!
பணவிடை நன்னடை!
இவ்வடை சொல்லடை!
இத்தமிழ்ச் சொல்லிடை
கிள்ளிட கிள்ளிட
ஜொள்ளிடு மென்வாய் – தமிழ்
சொல்லிடும் உன்கை!
அட! அட!
அடை! அடை!
முகநூலில் நீங்கள் பகிர்ந்த அந்த அடை photo missing! 🙁
அடை அடையாய் அடைத்தாலும் அழகுதமிழ் அடங்குமா
அடைத் தேனில் மிதந்தாலும் நம்பசியும் அடங்குமா!