வருணன்

வழிதடங்கள் யாவும்
முற்றிலும் சிக்கலானவை
எளிமையான வினோதங்களையுடையவை
நிசங்களின் காட்டில் உலவுதல்
மெய்யர்களுக்கெ சாத்தியம்.
அவர்களுக்கே தெரியுமதன் இருள் கவிந்த
ரகசிய பாதைகளும் மர்மத் தடங்களும்
காடு புதர்கள் மண்டியதோ இல்லையோ
புதிர்கள் மண்டியது.
கடப்பவரை விழுங்கிச் செரித்திடும்
புதைகுழிகள் ஏராளம்
தன் புதிர் முகத்தினை மட்டுமே
காட்டிடும் காடு எல்லா பொழுதுகளிலும்
எல்லையைக் கண்டவர் எவருமில்லை
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

படத்துக்கு நன்றி

http://www.indianetzone.com/30/dahragni_indian_sage_agastya.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *