மீன் சமையல்காரன்
வலையை விரிக்கிறேன்
விழித்து
விழிமூடும்வரை
வலையில் விழவேண்டும்
என்பதற்காக அல்ல
விழுபவை
வீணாகிவிடக்கூடாதே
என்பதற்காக
இருந்தநிலையில்
வந்துசேர்வதில்லை
அனைத்தும்
அவசர அவசியத்திற்காக
சந்தைக்கும்
சென்று திரும்புவதுண்டு
வலைவிரிக்கத்தெரியாதவர்களுக்கு
அரிய தருணங்கள்
அறியாத்தருணங்களே
கணமும் வலைகளோடு
கவனமாய்த்திரிகிறேன்
கர்வமடைகிறேன்
இருந்தும் தேடியும்
பெறவேண்டியதைப்
பெறவேண்டும் என்பதே
பெருநோக்கம்
படத்துக்கு நன்றி: http://pdnphotooftheday.com/2009/01/288