சத்தியமணி
வாருங்கள் பலகோடி சேர மகளிர் நிலமேக!
பாடுங்கள் தமிழாள் வாழ! நிலத்து நலமாக !
பருவங்கள் மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை
புருவங்கள் ஏறும் அறிவீர்!அவள் புன்னகை சேர்க்கை ()
பேதைமெய் சிறுமிகுறுமி பாலை வடிவெடுத்தாள் (5-7)
பெதும்பையே ஆகத்தருவி தும்பை நுனிபிடித்தாள் (8-11)
மங்கையாய் பருவமெய்தி பெண்மை பெயர்ந்தாள் (11-13)
மடந்தையாள் மாந்தளிராகி மலராய் சிரித்தாள் (14-19) ()
அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)
தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)
பேரிளம்பெண் அன்னை யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)
நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள் ()
நங்கையாகி உறவுகள் ஏற்று பெண்ணின் பெருமை – மாலன்
தங்கையிவளே ! மகளாய் பிறந்தாள்! சக்தி மகிமை !
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய் இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

Leave a Reply