வார ராசி பலன்!….(31-03-13 – 06-04-13)
காயத்ரி பாலசுப்ரமணீயன் மேஷம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் கல்வி விஷயத்திலும், அக்கறை செலுத்தி வந்தால், குழந்தைகளோடு இல்லத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி யாக இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு செலவினங்கள் கூடினாலும் பணப் பிரச்னைகளை தீர்த்து வைக்க நட்பு கை கொடுக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுப ட் டி ருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும்.மாணவர்கள் வீண் சந்தேகங்களை ஒதுக்கி துணிச்சலுடன் பணியாற்றினால். எதிலும் வெற்றிதான்! இந்த வாரம் கலைஞர்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் தோன்றினாலும் இயல்பான வேலைகள் சீராக ஓடிக்கொண்டிருக்கும்.
ரிஷபம்: இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். பெண்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற உறவுகள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். வியாபாரிகள் வெளி நாட்டில் இருந்து எதிர்பார் த்த வர்த்தக உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.மாணவர்கள் கோபத்தை கைவிட்டு செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும், சிறு தொழில் புரிபவர்கள் வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.
மிதுனம் : அலங்காரப் பொருட்கள், மற்றும் ஆயத்த ஆடைகளை விற்கும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் அவ்வ ளவாய் இராது . மாணவர்கள் மற்றவர்களுக்காக உதவுவதாக எண்ணி வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். இந்த வாரம் குடும்ப மருத்துவ செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.. . செய்யும் செயல்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயலாற்றி நல்ல பெயர் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை ஓரளவு குறையும்
கடகம்: பெண்களின் மனக் குறை தீர, குல தெய்வ வழிபாடு கை கொடுக்கும். வியாபாரிகள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பிபொருட்களை கடன் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்ப உள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேவைக்கதிகமாக பணம் கொடுக்க வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். இந்த வாரம் கலைஞர்களுக்கு திடீர் பண நெருக்கடி உண்டாகலாம்.
சிம்மம்: இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளும், மன நிம்மதிக் குறைவும் ஏற்படாமலிருக்க பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த சூழலிலும் கவனமாக இருப்பது அவசியம். சரளமான பணவரவால் பெண்களின் கடன் பிரச்னைகள் தீரும். .மாணவர்கள் முன் கோபத்தைக் குறைத்து பெற்றோரின் சொல் கேட்டு நடப்பது நல்லது. பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை குறை சொல்வதைத் தவிர்த்து நல்ல முறையில் வழி காட்டினால், வேலைகள் விரைந்து முடியும்.
கன்னி: குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும். பெண்களுக்கு உறவுகளால் சில அனுகூலங்கள் வந்து சேரும். வேலையில் இருப்பவர்கள் எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக அதிக பணம் ஒதுக்க வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமூகத்தில் இருக்கும் நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும் இந்த வாரம் மாணவர்களுக்கு நண்பர்களால் செலவுகள், சங்கடங்கள் வந்து நீங்கும். கலைஞர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
துலாம்: கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள், எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் முன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பப் பிரச்னையில் பக்குவமாகக் கையாள்வதன் மூலம், பெண்கள் தங்கள் அமைதியை தக்க வைத்துக் கொள்ளலாம் . கலைஞர்கள் சுமையாய் தோன்றிய பணியை சவாலாய் எடுத்து செயல்பட்டு பாராட்டு பெற்று மகிழ்வர். வியாபார வட்டத்தில் சிறு சலசலப்பும், சலிப்பும் உண்டாகும் சூழலிருப்பதால், சரக்கு வினியோகத்தில் குள்றுபடிகள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், வேண்டிய லாபம் பெற, அன்றாட நிலவரங்களைக் கவனித்து செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்: மாணவர்களுக்கு நெருங்கிப்பழகியவரால் சில தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பிருப்பதால், செல் போன்களின் பயன்பாட்டில் விழிப்பாய் இருப்பது அவசியம். பெண்கள் கண்ணில் பட்ட பொருளையெல்லாம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டால், உங்கள் சேமிப்பு குறையாமலிருக்கும். வியாபாரிகள் கடனை வசூல் செய்யும் பொழுது பக்குவமாக நடந்து கொண்டால், வாடிக்கையாளர்களின் ஆதரவு குறையாது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பேச்சு வார்த்தைகளைக் குறைத்துக் கொண்டு கடமையில் கவனம் செலுத்தி வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.
தனுசு: மாணவர்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிறிய தவறுகளும் மற்றவர்களின் பார்வையில் பெரிதாகத் தெரியக் கூடும். சுய தொழிலில் ஈடு ப ட்டுள்ளவர்கள் வங்கி மற்றும் வருமான வரி விவகாரங்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், பிரச்னைகளை எளிதில் தீர்த்துவிடலாம்.இந்த வாரம் வேலையில் இருப்போர், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், வீண் அரட்டை, விவாதம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாதிருப்பது நல்லது. உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும் வரை பொறுமையாய் இருந் தால் நல்ல பலன் கிட்டும்.
மகரம்: முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. பணி புரியும் பெண்கள் மன உறுதியுடன் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரை ப் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளிப்பதே புத்திசாலித் தனம் கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியாக வேலைகளை செய்ய முடியும், வியாபாரிகள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களையும், மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.
கும்பம்: இந்த வாரம் கலைஞர்கள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்கள் மூலம் முழுமையான லாபமும் நல்ல பெயரும் பெறலாம்.பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால் எந்த தொல்லையும் தோன்றாது. சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களையும் உங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், பெறுகின்ற லாபம் கணிசமாக இருக்கும்.
மீனம்: மாணவர்கள் கணினி, புகைப்படக் கருவி போன்ற விலையுயர்ந்த பொருட்களை பத்திர மாக வைப்பதுடன், அவற்றை கவனமாகவும் கையாண்டால் வீண் விரயங்களைத் தவிர் த்துவிடலாம். வியாபாரிகள் பெரிய நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கும் முன் நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டு காசோலைகளை வழங்குவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம்