நட்சத்திர பரிதாபம்
-தனுசு
நாயும் அனாதையும்
இங்கு
ஒன்றானதடா!
நாதியற்ற ஜீவன்களுக்கு
வீதியே வீடடா!
பேயும்
பிசாசும்
ஊருக்குள்ள வாழுதடா!
மனித நேயமிங்கு
மண்ணாகி நாறுதடா!
நண்டு
சிண்டு
தடி
கைத்தடி
ஊருக்குள்
அடங்காமல் ஆடுதடா!
வியர்த்து
களைத்து
ஓடி
உழைக்கும்
உயிரெல்லாம்
அடங்கிக் கிடக்குதடா!
ஐந்தாண்டு திட்டங்கள்
ஆரம்பமாச்சு
அது
ஐந்தாண்டுக்கொரு முறை
புதுப்பிக்கலாச்சு
ஐம்பதாண்டாய் இதே பேச்சு
இன்று
வேலைக்கு கூலியென்றாச்சு.
நரிக்கூட்டம் நாட்டையாளும்
நாடகத்தில்
தொலை நோக்கு
வறுமை போக்கு
என்பெதெலாம் நடிப்படா!
நம்பியிருக்கும்
நாமெல்லாம்
கண்டு களிக்க
நடத்தும் கூத்துடா!
அணு உலைக்கும்
அரிசி விலைக்கும்
பாதுகாப்பு இல்லையடா!
இதில்
ஏழைக் கிழவிக்கும்
வாயில்லா ஜீவனுக்கும்
எதிர்பார்த்தால்
நீ ஒரு ஏமாளியடா!
கருவறையும் இருட்டுடா
கல்லறையும் இருட்டுடா
இடைப்பட்ட பயணத்தில்
வெளிச்சம் தருபவன் மனிதனடா!
பணம்
பதவி
பட்டம் கொடுக்குமடா
உயிர் விட்டால்
பிணம்
எனும் பட்டம்
அனைவருக்கும் பொதுவடா!
கவிஞர் தனுசுவின் உணர்ச்சி பொங்கும் கவிதை. பளாரென அறைவது போன்ற ‘நறுக்’ வரிகளால் நாட்டு நடப்பை விவரித்திருக்கிறீர்கள். மனக்குமுறலை வேகத்தோடு வெளிப்படுத்தும் நேரத்திலும் சிறிதும் பிசகாத தங்கள் சொல்லாட்சி கண்டு, எப்போதும் நான் வியந்திருக்கிறேன். மிக அருமையான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி.
//அணு உலைக்கும்அரிசி விலைக்கும்பாதுகாப்பு இல்லையடா!//
@தனுசு, நண்பா எங்கயோ போயிட்டீங்க!
அருமை!
மிக அருமை திரு.தனுசு அவர்களே!
கவிதையில் எந்த உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், அதன் முழு பரிமாணத்தையும் வரிகளில் கொண்டு வந்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில் மிளிரும் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தங்கள் கவிதையிலும் கண்டேன் தனுசு. தொலைநோக்குப் பார்வையுடன் படைக்கப்பட்டுள்ள நல்ல கவிதை. பாராட்டுக்கள் நண்பரே!
கவிதையை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பார்வதி இராமச்சந்திரன். wrote…///மனக்குமுறலை வேகத்தோடு வெளிப்படுத்தும் நேரத்திலும் சிறிதும் பிசகாத தங்கள் சொல்லாட்சி கண்டு, எப்போதும் நான் வியந்திருக்கிறேன்////
மாதவன் இளங்கோ wrote….///// நண்பா எங்கயோ போயிட்டீங்க!////
அருமை!
சச்சிதானந்தம் wrote…/// கவிதையில் எந்த உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், அதன் முழு பரிமாணத்தையும் வரிகளில் கொண்டு வந்து விடுகிறீர்கள்.
மேகலா இராமமூர்த்தி wrote….///பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில் மிளிரும் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தங்கள் கவிதையிலும் கண்டேன் தனுசு. தொலைநோக்குப் பார்வையுடன் படைக்கப்பட்டுள்ள நல்ல கவிதை///
இந்தக்கவிதையின் மூலம் நான் மிக சிறந்த பாராட்டுகளை பெற்றுள்ளேன். ஊக்கம் தானே நம்மை இன்னும் ஒளிரரச்செய்யும். அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.
பண்பிழந்து
மாண்புகள் தொலைத்தோர் எல்லாம்
வாகைசூடி
மணிமுடி தரித்து
ஊழலின் குடைகீழ்
உலலசமாய் திரியும் வேளையில்
சாமானியர்கள்
சாகசம் காட்டினாலும்
இங்கே
சர்க்கஸ் கோமாளிகள் தான்…
எதிலும் எங்கும்
எவ்விடமும்
பாதுகாப்பில்லை…
==
அருமையான சிந்தாந்தங்கள் அடங்கிய
கவிதை நண்பரே.
மனமார்ந்த வாழ்த்துக்கள்…