2012-க்குள் கணினி வழி பஞ்சாயத்து முறை
ஊராட்சியுடன் தொடர்புடைய மென்பொருள் பயன்பாட்டிற்கான தேவைகளைக் குறிப்பிடும்படி மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேசத்திற்காகவும் தொடங்கப்பட்ட தகவல், பணிச் தேவைகள் அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை மற்றும் பிவிஆர் அறிக்கையின் அடிப்படையில் உருவான இந்த மென்பொருள் தேவைகளைப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
திட்டம், ஆய்வு, செயலாக்கம், கணக்கு, சமூக ஆய்வு தொடங்கி பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கி இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே இணையத்தளத்தில் வெளிவரத் தொடங்கிவிட்டன. மீதமுள்ளவை பல்வேறு கட்டங்களில் 2012ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்திற்குள் கிடைக்கும்.
இத்தகைய கணினிவழி பஞ்சாயத்து மூலம் அனைத்துத் தகவல் தொழில்நுட்பப் பயன்களும் மத்திய – மாநில அரசுத் துறைகள், மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் மற்றும் பொது மக்களுக்குக் கிடைக்கும்.
==============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை