விசாலம்

கருத்தரித்தாய் என்னை
காத்தருளினாய்
வினாடியும் கண்கொட்டாமல்
நானும் வளர்ந்தேன்
நீயும் மெலிந்தாய்
மசக்கை என்ற பெயரால்
உணவும் குன்றியது
வாந்தியும் எடுத்தாய்
உன் வாழ்க்கையில்
மேடு பள்ளங்கள்
சுற்றிச்சுழலும் கவலைகள்
உடன் என்னைச்சுமந்தாய்.
கால்களும் வீங்க
கீழே அமர தவித்தாய் ,
பிரசவத்தின் சூல் வலிக்கும்
ஈடு கொடுத்தாய் ,
“குவா குவா” சத்தம்
உனக்கு தேனாக இனித்தது.
வலி மறந்தாய்,
எனை அணைத்தாய் .
தந்தாய் எனக்கு ஒரு சிம்மாசனம்
மடியேற்றி அமுதூட்டினாய் .
மலமூத்திரம் புடவை நனைக்க
பொறுத்தாய் புன்னகையுடன்
என்னைக்காணும் போதெல்லாம்
உன் முகத்தாமரை மலர்ந்தது
அன்றிலிருந்து நான் வளர்ந்தேன். .
நலம் கோடி பெற்றேன்
“மாத்ருகடன்” சுமை வளர்ந்தது
அத்தனையும் தீர்ப்பது எப்படி?

என்னை வளர வைத்த உரங்கள்
நீ செய்த தியாகங்கள்
அதற்கு அளவே இல்லையம்மா
உன் திருவடிகளே என் கோயில்
அதைத் தொழுவதே என் வேலை

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *