சொல்லடா கேசவா….. சொல்லடா கேசவா
சத்தியமணி
சிரிக்கிறாய் அழுகிறாய் அழைக்கிறாய் மெதுவாய்
தெரிகிறாய் மறைகிறாய் அணைக்கிறாய் சுகமாய்
மண்ணிலெங்கும் தேடிதேடி உன்னிடத்தில் வந்தேன்
மாதவனே கோவிந்தனே என்னிடத்தில் கண்டேன் க்ருஷ்ணா கேசவா ()
மாதுளம் பூநிற பாதம்…. அதில் தாமரையாகிட நானும்
வாரணம் சூடிய நீயும்… அதில் வாசனையாகிட நானும்
பிறவிகள் தொடர்ந்து வரும்…நம்உறவினைக் காதல் என்கோ.
சொல்லடா கேசவா.. சொல்லடா கேசவா ()
ஒருவரும் இருவரல்ல…நாம் இருவரும் ஒருவரல்ல
பிரிவது ஒருமையல்ல.. சொல் ! பிழைவரும் உனக்குமெல்ல !
பிறவிகள் தொடர்ந்து வரும்…நம்உறவினை பக்தி என்கோ..
சொல்லடா கேசவா….. சொல்லடா கேசவா ()
பி.கு இதன் இசை வடிவ பகிர்வு http://youtu.be/XmxkF8nHpDY