மீ.விசுவநாதன்

am

தீயவர்கள் செயலுக்குத் தீர்ப்பொன்று தீட்ட

தீப்பொறியால் வந்தசீலா ! தெய்வத்தாய் சக்தி

நேயமுடன் வேலோன்றை வெற்றிக்காய்த் தந்து

நெற்றிமோந்த முருகவேலா ! கார்த்திகைவான் பெண்கள்

தூயநினை வாகவுனைத் தூக்கிமகிழ் வேளைத்

துயரங்கள் தீர்த்ததேவே ! ஆறுமுக மொன்றாய்

ஆயகலை கற்றிடவே அன்னையவள் சேர்க்க

அழகான முகம்பெற்ற அருள்கந்த வேளே !

செந்தூரில் கடலோரம் சிரித்தபடி சூரன்

சிரங்கொய்தாய் ! பெருவீர தீரனானாய் ! பின்பு

அந்தப்பேர்ச் செயலுக்காய் தேவானைப் பெண்ணை

அளித்தவுடன் மணம்புரிந்தாய் ! அண்ணனவன் அன்று

வந்துதவி செய்தவுடன் வள்ளியின்கை கோத்தாய் !

மந்திரச்சொல் ஓங்கார மகிமைதனை உந்தன்

தந்தைக்கே உரைத்திட்ட சத்குருவு மானாய் !

தமிழானாய் ! என்நாவில் சத்தியமா னாயே !

(எண்சீர் விருத்தம்: வாய்பாடு: காய்,காய்,காய்,மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *