நான் அறிந்த சிலம்பு – 75 (10.06.13)
புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில்
கடல் விளையாட்டு கண்டு களித்தபோது
ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட
தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள்
கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி.
பின் குயிலோன் அறிவித்த செய்தியை விரும்பியவளாய்
வானுயர்ந்த மேல் நிலை மாடத்தின் ஒரு புறமிருந்த
இளவேனில் காலத்துக்குரிய பள்ளியறையில்
மன்மதனை எதிர்கொள்ளச் சென்றனள்.
பெருமையும் சிறப்பும் பொருந்திய அணிகலன்களும்
தென்கடல் முத்தும் பொதிகை மலைச் சந்தனமும்
மன்மதனுக்கு எப்போதும் செலுத்தப்படும் காணிக்கைகள்.
மன்மதன் வீற்றிருக்கும் அரண்மனையாகிய
தனது முலை முற்றத்தில்
அக்குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பினில்
குற்றமற்ற சிறப்புடைய பொருட்களைக்
காணிக்கையெனச் செலுத்தினள்.
ஒன்பது வகைப்பட்ட நிலையினுள் முதன்மையான
பத்மாசன நிலையில் அமர்ந்து
சுரங்கள் குலைந்திடாத மரபினை உடைய
தனது யாழது தொழுது வாங்கித்
தன் வாயால் இனிய பண் பாடினள்.
பண் அது மயங்கவே
யாழினை மட்டும் மீட்டினள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 26
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html
படத்துக்கு நன்றி:

